டெல்லி மக்கள்தான் எங்கள் முதல்வர்

அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான்தயார் என்றும், நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. 11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறஉள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசான ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக. உள்ளிட்ட கட்சிகள் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில் பாஜக.வினருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ”நாளை மதியம் 1 மணிக்குள் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்கவேண்டும் என்று சவால் விடுத்தார். மேலும் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளரிடம் எத்தகைய விவாதத்திற்கும் தான்தயாராக உள்ளதாக கூறினார். இவ்வாறு முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்காவிட்டால் மீண்டும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான்தயார் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது குறித்து அமித்ஷா பேசியபோது:

அரவிந்த் கெஜ்ரிவால், எங்களை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்படி கூறியிருக்கிறார். மேலும், விவாதம் நடத்தத்தயார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை. நேரத்தையும், இடத்தையும் சொன்னால்போதும். பா.ஜ.க. உறுப்பினர்கள் அங்கு விவாதிக்கவருவார்கள். முதல்வரைப் பொருத்தவரை டெல்லி மக்கள்தான் எங்கள் முதல்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...