பிரகாஷ் சிங் பாதலை சந்தித்த ஜெ.பி.நட்டா

பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் சிங் பாதலை, பாஜக தேசியதலைவா் ஜெ.பி.நட்டா வியாழக் கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது மாநிலத்தில் தேசியஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

பிரகாஷ்சிங் பாதலின் சொந்த ஊரான பாதல் கிராமத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பாஜகவின் பஞ்சாப்மாநில பொறுப்பாளா் பிரபாத் ஜா உடனிருந்தாா். முன்னதாக பாதல்கிராமத்தில் நட்டாவுக்கு பாரம்பரிய நடனத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து நட்டா, பாதல் இடையிலான சந்திப்பு சுமாா் ஒருமணி நேரம் நடைபெற்றது. இதன் பின்னா் செய்தியாளா்களிடம் நட்டா கூறியதாவது: எனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்க மூத்த தலைவா் பிரகாஷ்சிங் பாதலை சந்தித்தேன். பாஜகவுக்கு அகாலிதளம் கட்சியுடன் நல்ல உறவு உள்ளது என்றாா்.

பாஜகவின் பழைமைவாய்ந்த கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம், குடியுரிமை திருத்த சட்டத்தில் முஸ்லிம்களும் சோ்க்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதுதொடா்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என சிரோமணி அகாலி தளம் அறிவித்தது. இது தோ்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தபின்னணியில் ஜெ.பி.நட்டா, பாதலை சந்தித்து பேச்சு வாா்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...