முஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்படுகிறது

மோடி இருக்கும் வரை: தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியதாவது:–

ஸ்டாலின் சென்னையிலிருந்து குடியுரிமை சட்டதிருத்தம் மசோதாவை பற்றி என்ன பேசப்போகிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். காலை, மதியம், மாலை, இரவு என்று போராட்டங்கள் நடத்தினாலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஒன்றும் செய்யமுடியாது. பிரதமர் நரேந்திர மோடி இருக்கும்வரை ஒருபோதும் நடக்காது.

இது 1940ம் ஆண்டு உள்ள ஜின்னா காலம் அல்ல. அது முடிந்துவிட்டது. தமிழகத்தில் இப்போது திமுக இல்லை, முஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்பட்டு வருகிறது. 1940, 47ல் இருந்த பாஜக தலைவர்கள் இல்லை. இப்போது இருக்கும் பாஜக தலைவர்கள் வேறு, பார்த்துகொண்டிருக்க மாட்டார்கள். இந்திய வரலாற்றிலேயே உலகத்தலைவர்கள் அகமதாபாத்தில் பலலட்சம் பேர் இருந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது பிரதமர் மோடி எவ்வளவு பெரியதலைவர் என கூறினார். மோடி இருக்கும்வரை தேசத்தை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

1947 ல் இருந்த முஸ்லிம்களும் 2020ல் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறது. இந்தியாவில் மசூதிகள் அதிகரித்து இருக்கிறதா குறைந்திருக்கிறதா நீங்களே சொல்லுங்கள். ஸ்டாலின் இப்போது ஸ்டாலின் ஆக இல்லை. தமிழர்கள் என்றுசொல்லும் ஸ்டாலின் இலங்கையில் தமிழர்கள்லட்ச கணக்கானவர்கள் கொல்லப்படும் போது ஒன்றும் செய்யவில்லை. அப்போது மத்தியில் காங்கிரஸ் தமிழகத்தில் திமுக தான் ஆட்சியில் இருந்தார்கள் இவர்களால் என்ன செய்யமுடிந்தது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொல்லதான் முடிந்தது.

பாஜக ஆட்சியில் இலங்கையில் ஒரு தமிழர்கூட கொல்லப்படவில்லை உலகத்தில் எந்த நாட்டிலும் ஒருதமிழர் கூட கொல்லப்படவில்லை. ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆகிவிட வேண்டும் என கனவு கண்டு கொண்டு இருக்கிறார். சென்னை மேயராக கூட ஆக முடியாது. காலை எழுந்தவுடன் பொய்பேசி வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஜெயிலிலிருந்து வெளியேவந்து உள்ளார். அவர் தான் இப்போது ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லி கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக, கிராமம் கிராமமாக, வீடுவீடாக சட்டத்தைப் பற்றி விளக்கிச் சொல்லவும் பாஜக தயங்காது. தேசிய குடியுரிமை திருத்தசட்டத்தை பற்றி பொய்பிரச்சாரம் ஒருபோதும் வெற்றிபெறாது. இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய குடியுரிமை சட்டதிருத்த ஆதரவு விளக்கபேரணி மற்றும் விளக்க கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட பாஜக. சார்பில் நேற்று நடந்தது.அதில் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியது

 

One response to “முஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்படுகிறது”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...