ஒருவர் பதவிக்கு முயற்சி செய்யலாம். முடிவு தெரிந்து விட்டால் முதலில் சென்று வாழ்த்துபவர்களும் அவர்களே

பாஜகவில் அமைப்புக்கு என்று ஒருபிரிவு, அரசியலுக்கு என்று ஒருபிரிவு உள்ளது எனவும், இதுபோன்ற ஒருதிட்டம் ரஜினி மனதில் இருக்கலாம் எனவும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஆசிரியர் சங்கத்தின் புதுச்சேரி கிளைசார்பில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான கருத்தரங்கம் இன்று (மார்ச் 13) புதுவை தமிழ்சங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பாகக் கேட்டதற்கு இல.கணேசன் கூறியதாவது:

“பாஜகவில் அமைப்புக்கு என்று ஒருபிரிவு, அரசியலுக்கு என்று ஒருபிரிவு உள்ளது. நான் அமைப்பிலிருந்து வந்தேன். பின்னாளில் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னைத் தேர்தலில் நிற்கப்பணித்தார்கள். தீனதயாள் உபாத்தியாயா எங்களது அகிலபாரத தலைவராக இருந்து அமைப்பை பலப் படுத்துவதில் கவனம் செலுத்தினார். ஆட்சிக்கு வருவதற்கு வாஜ்பாய் போன்றவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

இந்தத் திட்டத்தின் படிதான் பாஜக செயல்பட்டுவருகிறது. இதுபோன்ற ஒருதிட்டம் ரஜினி மனதில் இருக்கலாம். அதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். எதுவாக இருந்தாலும் அவர் கட்சிதொடங்கிய பிறகுதான், அது எப்படி செயல் படுகிறது என்பதை பார்க்கமுடியும். முதலில் கட்சிதொடங்கட்டும். அதன்பிறகே இவை எல்லாம் மக்களுக்குப் புரியவரும்”.

தமிழக பாஜக தலைவராக முருகன் நியமிக்கபட்டதற்கு மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களா என கேட்டதற்கு, “தமிழக பாஜக தலைவர்கள் குறித்து பத்திரிகையில் வந்த பெயர்ப்பட்டியலை பலர் கற்பனையாக எழுதி இருந்தார்கள். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். அவர் நியமிக்கபட்டதில் கட்சியினர் திருப்தியாக உள்ளனர். எனக்கு எந்தவருத்தமும் இல்லை. ஏனென்றால், நான் இந்த ரேஸில் இல்லை.

பாஜகவில் இருப்பவர்கள் சன்னியாசிகள் அல்ல. ஒருவர் ஒருபதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்குமானால், அந்த ஆசை பாஜகவில் இருப்பவர்களுக்கும் உண்டு. ஆனால், மற்றகட்சிக்கும் பாஜகவுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், ஒருவர் பதவிக்கு முயற்சிசெய்யலாம். ஆனால், முடிவு என்று தலைவர் அறிவித்து விட்டால், யார் பதவிக்கு விரும்பினாரோ அவர்தான் முதலில் சென்று தலைவராக அறிவித்த நபருக்கு மாலைபோடுவார். இதுதான் பாஜகவின் விசேஷத் தன்மை” என்று இல.கணேசன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...