கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியஅரசு அறிவித்துள்ள 15 அம்ச கட்டுப்பாடுகள்

1. நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல்குளங்களும் மூடப்படுகின்றன. மாணவர்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கவேண்டும்.

2. கல்விநிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். ஆன்லைனில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கலாம்.

3. தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றவேண்டும்.

4. பெரிய நிறுவனங்கள் ஆலோசனை கூட்டங்களை வீடியோகான்பரன்ஸ் மூலம் நடத்த வேண்டும்.

5. ஓட்டல்கள், விடுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் உடனுக்குடன் செய்யபடும். கைகள் கழுவதற்கு ஓட்டல்கள், விடுதிகளில் கூடுதல்வசதிகள் செய்யவேண்டும்.

6. திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தப்படவேண்டும். புதிய நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

7. உள்ளூர் விளையாட்டுபோட்டி நிகழ்ச்சிகளை நடத்தாமல் ஒத்திவைக்க வேண்டும்.

8. பொதுமக்கள் அதிகம்கூடும் வகையில் ஆன்மிக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக் கூடாது.

9. வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்கவேண்டும். சந்தைகளில் பொதுமக்கள் நெருக்கமாக இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

10. அனைத்து வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒருமீட்டர் இடைவெளியில் வரும் வகையில் ஏற்பாடுசெய்வது நல்லது.

11. பொதுமக்கள் தேவையில்லாமல் பஸ்கள், ரெயில்கள், விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும்.

12. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சிறுவர்களிடம் எப்படி பழகவேண்டும் என்ற அறிவுரையை டாக்டர்கள் வழங்க வேண்டும்.

13. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கை குலுக்க வேண்டாம். பாசத்துடன் கைபிடிப்பதையும் தவிர்க்கவேண்டும்.

14. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எங்கிருந்து என்ன பொருட்கள் வாங்குகிறீர்கள் என்பதில் கவனம்தேவை.

15. கொரோனா வைரஸ் தொடர்பான தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம். வாட்ஸ்அப்பில் தேவையற்ற தகவலை பரப்பாமல் அமைதிகாப்பது நல்லது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

R

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...