1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரணம்

கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.

இந்த பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின்கீழ் நேரடி பணப் பரிமாற்றங்களும் உண்டாம். அதோடு ஒவ்வொரு சுகாதாரத்துறை பணியாளருக்கும் (Health workers) 50 லட்சம் ரூபாய் வரைக்குமான மருத்துவ இன்சூரன்ஸ் வழங்ககிறார்கள் .

சுமார் 80 கோடி மக்கள் இந்த பிரதான்மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் வருவார்களாம். இந்ததிட்டத்தின் கீழ் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க இருக்கிறார்கள். இது வழக்கமாக வழங்கப்படும் ரேஷன்பொருட்கள் இல்லாமல் கூடுதலாக வழங்கப்படுவது.

இதுபோக பிரதான் மந்திரி கரீப்கல்யான் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ஏதாவது ஒருவகை பருப்பும் ஒரு கிலோ, அடுத்த 3 மாதங்களுக்கு கிடைக்கும். இவைகளை இரண்டு தவணைகளாக திட்டத்தின்கீழ் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் முதுகு எலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான்திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது முதல்தவணையை கொடுக்க படுகிறது.  இதனால் சுமாராக 8.69 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இருக்கும் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு அரசுவழங்கும் கூலியை உயர்த்தி இருக்கிறார்கள் . இதனால் இந்த திட்டத்தின்கீழ் வேலைசெய்யும் ஒருநபரின் வருமானம் 2000 ரூபாய் வரை அதிகரிக்கும்.

அரெசே நேரடியாக பணத்தை பரிமாற்றம்செய்யும் வேலை 8 பாகங்களாக நடைபெறும் எனச்சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர். விவசாயிகள், ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் இருப்பவர்கள், விதவைகள், ஏழை பென்ஷன்தாரர்கள், திவ்யாங் (மாற்றுத் திறனாளிகள்), ஜன் தன் திட்டத்தின் கீழ் இருக்கும் பெண்கள், உஜ்வாலா திட்டத்தின்கீழ் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர்கள்,

சுய உதவி குழுவினர்கள், EPFO கீழ் இருக்கும் அமைப்பு சார்ந்ததொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள்.வயதான ஏழை எளிய குடிமக்கள், தங்கள் கணவர்களை இழந்த விதவைபெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் (திவ்யாங்க் ஹிந்தியில் ) அடுத்த மூன்று மாதங்களுக்கு 1,000 ரூபாய் பெறுவார்கள் .

இந்தியாவில் வறுமை கோட்டுக்குக்கீழ் வாழும் 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக எல் பி ஜி கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்க இருக்கிறார்களாம்.

அதோடு இந்தியா முழுமைக்கும் இருக்கும், 63 லட்சம் பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு இதுவரை சொத்துபத்துக்கள் மற்றும் வங்கியில் பிணை இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன்வழங்கி வந்தார்கள். இனி 20 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்க இருக்கிறார்களாம்.

சம்பளத்தில் பிடித்தம்செய்யப்படும் 12 % பி எஃப் (ஊழியர் பங்கு + முதலாளி பங்கு) இரண்டுமே அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்பம். இந்த அறிவிப்பு எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தாது. 100 ஊழியர்களுக்குகீழ் இருக்கும் கம்பெனிகளில், 90 சதவிகிதம் ஊழியர்கள் மாதம் 15,000 ரூபாய்க்குகீழ் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்குத்தான் பி எஃப் தொகையை மத்திய அரசு வழங்கும்.

கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு என்று தனிநிதி இருக்கிறது. அந்தநிதியின் பெயர் Buildings and Other Construction Workers’ Fund. அந்த நிதியை கொடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி இருக்கிறது.

அதேபோல கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதனை, மருத்துவ மையங்கள் போன்ற மருத்துவ செலவுகளுக்கு, மாவட்ட மினரல்நிதியில் (District Mineral Fund) இருந்து செலவழித்து கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...