விவசாயக் கடனுக்கான வட்டி மானியம் 31-ம் தேதிவரை நீட்டிப்பு

விவசாயக் கடனுக்கான வட்டி மானியத்தை மே 31-ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தேசிய ஊரடங்கால் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளனா். அவா்களுக்கு உதவும்வகையில் இந்த வட்டிமானிய சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) பிற வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், குறுகியகால விவசாயக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு மே 31-ஆம் தேதிவரை வட்டி மானியம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி வட்டியில் 2 சதவீதமும், குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது 3 சதவீதமும் சலுகை கிடைக்கும்.

இப்போதைய ஊரடங்கு சூழலில் விவசாயிகள், வங்கிக்கு சென்று கடனை திருப்பச்செலுத்த முடியாத நிலை இருக்கும். எனவே, மே 31-ஆம் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படுகிறது. கடந்த மாா்ச் 1 முதல் மே 31-ம் தேதிவரையிலான காலகட்டத்தில் ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு இந்தசலுகை கிடைக்கும்.

குறுகிய விவசாய கடனாக ரூ.3 லட்சம் வரை பெறும்போது 7 சதவீதம் வட்டியாகும். இதில் வட்டிமானியம் 2 சதவீதம் அளிக்கப்படுகிறது. குறித்தகாலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் மொத்தமாக 3 சதவீதம் வட்டிமானியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...