தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.11 ஆயிரம் பரிசு

இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகளவில் பரவியதற்கு டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடும் ஒருகாரணமாக அமைந்துள்ளது. இதனால் மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள் தனிமை படுத்தப்பட்டு அவர்களுக்கு உரியசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாநாட்டில் பங்கேற்றவர்களில் சிலர் தலை மறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து உபி பாஜக எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா கூறும்போது, “தப்லீக் மாநாட்டுக்கு சென்றுவந்தவர்கள் குறித்தோ, வெளிநாட்டுக்கு சென்று திரும்பி அந்த தகவலை மறைப்பவர்கள் குறித்தோ தகவல் தருவோருக்கு ரூ.11 ஆயிரம் பரிசு வழங்க படும்.

என்னுடைய சலேம்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த தகவலை அளிக்கலாம். மக்கள் தங்களுக்குத்தெரிந்த தகவல்களை எங்களிடம் அளிக்கலாம். அவர்கள் பற்றிய ரகசியம் பாதுகாப்பாக வைக்கப்படும். என்னுடைய 2 தொலைபேசி எண்களையும் கொடுத்துள்ளேன்.

இது தொடர்பாக போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. வைரஸ் பரவக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தபரிசை அறிவித்துள்ளேன். மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.-

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...