இந்தியா ‘உலகின் மருந்தகம்’

இன்று நடைபெற்ற  அணிசேரா நாடுகளின் மாநாட்டில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கிறார். அணிசேரா இயக்கம் எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர் களாகவும் உள்ளனர்.

இந்தஇயக்கம் 1961-ம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல்பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல்தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும்நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனின்சுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலில் கலந்துகொள்ளாமல் முதல்முறையாக தவிர்த்தார். தொடர்ந்து, 18-வது அணிசேரா நாடுகளின் மாநாடு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதிலும் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இந்தமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதே மோடி இந்தமாநாட்டை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அணிசேரா நாடுகளின் மாநாடு அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமை இன்று நடந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளதால், இந்த முறை மாநாட்டில் பங்கேற்றார்.

அதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது;

  • மனிதநேயம் ஒருபெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது; COVID-19 ஐ சமாளிக்க NAM பங்களிக்கவேண்டும்.
  • NAM உலகின் தார்மீகக் குரலாக இருந்துவருகிறது; அது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
  • இந்தியா ‘உலகின் மருந்தகம்’ என்று கருதபடுகிறது; COVID-19 பாதிப்பை அடுத்து 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளோம். உலகம் COVID-19 உடன் போராடுகையில், சிலர் சமூகங்களையும் நாடுகளையும் பிளவு படுத்த பயங்கரவாதம், போலிசெய்திகள் மற்றும் மெய்நிகர் வீடியோக்கள் போன்ற வேறுசில கொடிய வைரஸ்களை பரப்புவதில் மும்முரமாக உள்ளனர்.
  • COVID-19 தற்போதுள்ள சர்வதேச அமைப்பின் வரம்பைக் காட்டுகிறது. COVID க்குப் பிந்தைய உலகில், நேர்மை, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் உலக மயமாக்கலின் புதிய வார்ப்புரு நமக்குத்தேவை. இன்றைய உலகின் அதிக பிரதிநிதிகளான சர்வதேச நிறுவனங்கள் நமக்குத் தேவை என்றார்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...