தொழிலாளர்களை அழைத்துசெல்லும் ரயில்களுக்கு பயண கட்டணம் வசூலிக்க பட வில்லை

கொரோனா பரவுவதை தடுக்க நீட்டிக்கபட்டுள்ள லாக்டவுனால் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர் களுக்கான பயணகட்டணத்தில் ரயில்வே நிர்வாகம் 85% ; மாநில அரசு 15% செலுத்தும் என்று பாஜக விளக்கம் அளித்திருக்கிறது.

லாக்டவுன் நீட்டிப்பை தொடர்ந்து மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனி நபர் இடைவெளியுடன் பயணிகள் அமரவைக்கப்பட்டு இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆனால் இந்த ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம்பெறப்படுவதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இதனை முன்வைத்து மத்தியஅரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில், ரயிலில்செல்லும் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்கும் என அறிவித்தார்.

இந்த நிலையில் பாஜகவின் தேசிய செய்திதொடர்பாளர் சம்பிட் பட்ரா தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் தந்துள்ளார்.

லாக்டவுன் தளர்வுகளின்போது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில், தொழிலாளர்களை அழைத்துசெல்லும் ரயில்களுக்கு பயண சீட்டு எங்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது. ரயில்வே நிர்வாகம் 85% மானியத்துடனும் மாநில அரசின் 15% பங்குடனும் இந்தகட்டணம் பகிர்ந்து கொள்ளப்படும் என தெளிவாகவே குறிப்பிட பட்டிருக்கிறது. இதனடிப்படையில் மத்திய பிரதேச பாஜக அரசு பணம் செலுத்தியுள்ளது. இதேபோல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் பின்பற்றலாம் என குறிப்பிட்டிருக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...