இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு

கொரோனா பிரச்னையால், பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை, அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல, நேற்று வரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே செய்திதொடர்பாளர் கூறியதாவது:பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், வெவ்வேறு மாநிலங்களில் வேலைபார்த்து வந்தனர். தொழிலாளர்கள் போக்குவரத்து முடங்கியதால், இவர்களால் சொந்தமாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை இருந்தது. தொழிலாளர்களை மீட்க, ரயில்வே சார்பில், சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப் பட்டது.இதன்படி, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, இதுவரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ரயிலிலும், 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன.

இந்த சிறப்பு ரயில்கள் மூலம், இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கான செலவுகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன், மத்திய அரசு பகிர்ந்துள்ளது. குஜராத், கேரளா ஆகியமாநிலங்களில் இருந்து தான், அதிகமான தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பீஹார், உ.பி., மாநிலங்களுக்குத் தான், அதிக தொழிலாளர்கள் வந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சிவ் கோபால் மிஸ்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அரசியல் வேண்டாம் சிறப்பு ரயில்கள், இலவசமாக இயக்கப்படுவதாக தெரிந்தால், ரயில்வேஸ்டேஷன்களில் தொழிலாளர்கள் அதிக அளவில் கூடி விடுவர்; இது, கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும். இதனால் தான், சிறப்புரயில்களில் செல்வதற்கு தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக, ரயில்வே அறிவித்தது. கொரோனா வைரஸ் போன்ற பெரியநெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், இதுபோன்ற அரசியல் விளையாட்டுகள் வேண்டாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...