இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு

கொரோனா பிரச்னையால், பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை, அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல, நேற்று வரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே செய்திதொடர்பாளர் கூறியதாவது:பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், வெவ்வேறு மாநிலங்களில் வேலைபார்த்து வந்தனர். தொழிலாளர்கள் போக்குவரத்து முடங்கியதால், இவர்களால் சொந்தமாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை இருந்தது. தொழிலாளர்களை மீட்க, ரயில்வே சார்பில், சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப் பட்டது.இதன்படி, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, இதுவரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ரயிலிலும், 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன.

இந்த சிறப்பு ரயில்கள் மூலம், இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கான செலவுகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன், மத்திய அரசு பகிர்ந்துள்ளது. குஜராத், கேரளா ஆகியமாநிலங்களில் இருந்து தான், அதிகமான தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பீஹார், உ.பி., மாநிலங்களுக்குத் தான், அதிக தொழிலாளர்கள் வந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சிவ் கோபால் மிஸ்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அரசியல் வேண்டாம் சிறப்பு ரயில்கள், இலவசமாக இயக்கப்படுவதாக தெரிந்தால், ரயில்வேஸ்டேஷன்களில் தொழிலாளர்கள் அதிக அளவில் கூடி விடுவர்; இது, கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும். இதனால் தான், சிறப்புரயில்களில் செல்வதற்கு தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக, ரயில்வே அறிவித்தது. கொரோனா வைரஸ் போன்ற பெரியநெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், இதுபோன்ற அரசியல் விளையாட்டுகள் வேண்டாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...