மனித உரிமை மீறலில் ஈடுபடும் நக்ஸலைட்டுகள் -அமித்ஷா

நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தற்போதைய கள நிலவரம் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அந்த மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டு களில், நக்சல் நடமாட்டம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர்களுக்கு எதிராக இறுதி யுத்தம் நடைபெற்று வருகிறது.

நக்சல்களுக்கு எதிராக இதுவரை பதில் தாக்குதல்கள் மட்டுமே நடத்தப்பட்டன; சமீபகாலமாக, நக்சல்களை தேடி கண்டறிந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், நக்சல் நடமாட்டம் மிகுந்த மாநிலங்களில் கூட 70 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பதிவாகின. இதற்கு முன் இவ்வளவு அதிகமான ஓட்டுகள் பதிவாகவில்லை. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு கோடி மக்களின் வளர்ச்சிகளை நக்சல்கள் தடுத்து உள்ளனர்.

இதன் வாயிலாக, மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் நக்சல்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, நக்சல் அமைப்பினரை, 2026 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 36 நக்சல்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...