மனித உரிமை மீறலில் ஈடுபடும் நக்ஸலைட்டுகள் -அமித்ஷா

நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தற்போதைய கள நிலவரம் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அந்த மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டு களில், நக்சல் நடமாட்டம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர்களுக்கு எதிராக இறுதி யுத்தம் நடைபெற்று வருகிறது.

நக்சல்களுக்கு எதிராக இதுவரை பதில் தாக்குதல்கள் மட்டுமே நடத்தப்பட்டன; சமீபகாலமாக, நக்சல்களை தேடி கண்டறிந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், நக்சல் நடமாட்டம் மிகுந்த மாநிலங்களில் கூட 70 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பதிவாகின. இதற்கு முன் இவ்வளவு அதிகமான ஓட்டுகள் பதிவாகவில்லை. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு கோடி மக்களின் வளர்ச்சிகளை நக்சல்கள் தடுத்து உள்ளனர்.

இதன் வாயிலாக, மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் நக்சல்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, நக்சல் அமைப்பினரை, 2026 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 36 நக்சல்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...