உலகின் சப்ளை செயினாக உருமாறும் இந்தியா-

உலகநாடுகள் அனைத்தையும் கொரா னா அடித்து துவைத்து தொங்கப் போட்டுவரும் நிலையில் இந்தியா கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டிற்காக 20 லட்சம் கோடியை அறிவித்துஉலகின் அடுத்த வல்லரசு நாங்கள் தான்என்று அறிவித்து இருக்கிறது.

மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டத்தின் முக்கிய அம்சம் சுய சார்பு பொருளா தார மேம்பாடு. இந்த சுய சார்பு பொருளா தார மேம்பாடு உருவாக வேண்டும் என்றால் இந்தியாவில் உற்பத்தி அதிகரி த்து ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்.

உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறு வனங்களாக மாற வேண்டும் இதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது.இப்பொழுது உலக பொருளாதாரத்தை தீர்மானித்து வரும் சீனாவின் சப்ளை செயின் உடைந்து கொண்டு இருக்கிற து .இனி அது இந்தியாவில் இருந்தே உருவாக இருக்கிறது.

இந்த சப்ளை செயின் தான் ஒரு நாட்டின் தொழில் உற்பத்தியை தீர்மானிக்கிறது.ஒரு தொழில் நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால் அதன் சப்ளை செயின் சரியாக இயங்க வேண்டும்.இதில் ஏதாவது ஒன்று அறுந்து விட்டால் கூட அந்ததொழில் நிறுவனம் அவ்வளவுதான். ஒரு தொழில் சரியாக இயங்க வேண்டும் என்றால் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் சரியான இடத்தி ல் இருந்து வரவேண்டும்.

அந்த மூலப்பொருட்கள் சரியான நேரத்தி ல் கிடைக்குமாறு சரியான போக்குவரத் து வசதி இருக்க வேண்டும்.இப்படி சரியா ன நேரத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து உற்பத்தியை இயக்க சரியான தொழிலாளர்கள் இருக்க வேண்டும்.

இப்படி உருவான பொருட்களை சரியான விற்பனையாளர்களிடம் கொண்டு செல்ல சரியான முகவர்கள் இருக்கவேண்டும்.இந்த விற்பனையார்கள் தான் நுகர் வோர்களிடம் எங்கோ உற்பத்தியாகும் பொருட்களை கொண்டு சேர்க்கிறார்கள்.

இந்த சப்ளை செயின் எங்காவது ஒரு இடத்தில் அறுந்து விட்டால் அந்த நிறுவனம் காலிதான்.சீனாவின் சப்ளை செயின் கடந்த வருடம்வரை மிக அற்புதமாக இயங்கி வந்தது.ஜப்பான் தென் கொரியா நாடுகளில் இரு ந்து வரும் சரியான மூலப்பொருட்களை வைத்து சீனாவில்உள்ள தொழிலாளர்க ள் பல்வேறு பொரு ட்களாக சரியான இட த்தில் வைத்து சரியான நேரத்தில் உரு வாக்கி வந்தார்கள்.
.
இப்படி உற்பத்தி யாகும் பொருட்களை அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மன் இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் சரியான முக வர்களாக இருந்து உலக நாடுகளிடம் தங்களின் பெயர் தாங்கி நுகர்வோர்களிடம் சேர்த்து வந்தார்கள்.

ஆக உலக வர்த்தககத்தின் சப்ளை செயின் சீனாவை சுற்றியே இதுவரை இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு அமெக்கா சீனாவுடன் வர்த்தக போரை ஆரம்பி த்து சப்ளை செயினின் விற்பனை என்கி ற முக்கிய வளையத்தை அறுக்க ஆரம்பித்தது.

அடுத்து கொரானா வைரசை உருவாக்கியதால் உற்பத்தி மையங்கள் மூடப்பட்டனஇதனால் தொழிலாளர்கள் வேலை இழ ந்தார்கள்.ஆக உற்பத்தி என்கிற சப்ளைசெயினின் அடிப்படை வளையமும் துருப்பிடிக்க ஆரம்பித்தது.இதனால் சீனாவுக்கு மூலப்பொருட்களை அளிக்கும் சப்ளை செயினின் முதல் வளை யங்களான ஜப்பான் தென்கொரியா நாடுகள் மாற்று ஏற்பாட்டை தேட ஆரம்பித்தன

இந்த நேரத்தில்தான் இந்தியாவின் ச ப்ளை செயினை உருவாக்கி வரும் மே னேஜர் மோடி சீனாவில் சப்ளை வளைய த்தில் இருக்கும் நாடுகளின் கண்ணில் தெரிய ஆரம்பித்தார். இந்தியாவின் சப்ளை செயினை மோடி நவீன உள்கட்ட மைப்பு மூலமாக உருவாக்கி வருவதை
அறிந்த நாடுகள் சீனாவில் இருந்து சப்ளை செயினை உடைக்க விரும்புகின்றன்.

இதில் முக்கியமான விசயம் என்னவெ னில் சீனாவின் சப்ளை செயினுடன் இணைந்து இருக்கும் நாடுகள் அனைத்து ம் சீனாவின் கொள்கைக்கு மாறான கொள்கையை உடைய நாடுகள் .இருந்தாலும் மாற்று வழி இல்லாததால் சீனாவின் சப்ளை செயினில் இணைந்து இருந்தார்கள்.

ஆனால் கொரானா வந்த பிறகு சீனாவி ன்சப்ளை செயினை உடைக்கவே அனை த்து நாடுகளும் விரும்புகின்றன்.இந்தநிலையில் அவர்களுடைய தேர்வு அமெரி க்கா ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகளிடம் இணங்கி இருக்கும் இந்தியாதானே இருக்க முடியும்.

சரியான தலைமை குழப்பங்கள் இல்லாதஆட்சி .இது இரண்டும் தான் ஒரு நாட்டைதொழில் வளர்ச்சி உடைய நாடாக உருவாக்க முடியும். இது இரண்டும் இந்தியாவிற்கு மோடி ரூபத்தில்கிடைத்து இருக்கிறது.

இதனால் தான்சீனாவின் சப்ளை செயி ன் அறுந்து இந்தியாவில் விழுந்து இருக்கிறது. இந்த சப்ளை செயினை இந்தியா தலைமையில் உலகநாடுகளை இணைக்கவே மோடி 20 லட்சம் கோடிகளை அறிவித்து இருக்கிறார். இனி உலக பொருளாதாரத்தை தீர்மா னிக்க இந்தியாவில் இருந்து உருவாகும் சப்ளை செயினில் சீனாவும் ஒருவளையமாக இருக்க முடியுமே தவிர சீனாவின் சப்ளை செயினில் இந்தியா இருக்க முடியாது. ஏனென்றால் இந்த நூற்றாண்டு
இந்தியாவின் நூற்றாண்டு..

நன்றி விஜய குமார் அருணகிரி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...