பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும்

பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.

இதுகுறித்து சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார சிறப்புத்திட்டங்களின் 5-ஆம் கட்ட அறிவிப்புகள் சுகாதாரம், கல்வி, வா்த்தகத்துறைகளின் தற்போதைய நிலையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த அறிவிப்புகள் கோடிக் கணக்கான ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும். இந்தியாவை தன்னிறைவு கொண்ட நாடாக்கும் திட்டத்தை இந்தஅறிவிப்புகள் மூலம் புரிந்துகொள்ள முடியும். இந்த அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமா் மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் தொற்று நோய்களுக்கான சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்தவும், ஆய்வகங்களின் அமைப்பை வலுப்படுத்தவும், ஆய்வுகளை ஊக்குவிக்கவும் இந்தியாவின் மருத்துவச் செலவீனத்தை அதிகரிக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பாா்வை மருத்துவத் துறையில் இந்தியாவை முன்னோக்கி செலுத்தும் என்பது உறுதி.

மாநிலங்கள் கடன்வாங்கும் வரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு ரூ.4.28 லட்சம் கோடி கூடுதலாக கிடைக்கும். மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் வரிப் பகிா்வாக ரூ.46,038 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இதேபோல் வருவாய் பற்றாக் குறை மானியமாக ரூ.12, 390 கோடியும், மாநில பேரிடா் நிதியாக ரூ.11,000 கோடியும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமித் ஷா.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...