பொதுமுடக்க காலகட்டத்தின்போது, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் (பிஎம்-கிஸான்) 9.65 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட இத்திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் தற்போது வரை விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் 9.65 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனா். அவா்களுக்கு ரூ.19,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |