மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் கோடியும் அடங்கும்.
ரூ.20 லட்சம்கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில் 9.25சதவீத வட்டியில் 100 சதவீத உத்தரவாத்ததுடன் அளிக்கப்பட்ட கடன் உதவி மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிர்மலா சீதாராமன்தெரிவித்திருந்தார். தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 9.5 சதவீதத்தில் இருந்து 17 சதவீதம்வரை உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழ்வது சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள்தான். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவற்றின் பங்களிப்பு 28 சதவீதமாக உள்ளது. அதேபோல நாட்டின் ஏற்றுமதியில் இத்துறையின் பங்களிப்பு 40 சதவீதமாகும். அத்துடன் இத்துறையின் மூலம் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக சிறு, குறு நடுத்தர தொழில்கள் உள்ளன.
மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையால் 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இதுதவிர, நொடித்து போன சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் உதவி அளிக்கும் வகையில் ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதுதவிர சிறப்பு நிதியம் ரூ. 50 ஆயிரம் கோடியில் உருவாக்க பட்டுள்ளது. இதுவும் இத்துறைக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |