புலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்

இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். லாக்டவுன் தொடங்கியதி லிருந்து அதில் 75 லட்சம் பேர் சொந்தமாநிலத்துக்கு ரயில்கள் மூலம் சென்றுவிட்டனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அது  கூறியதாவது: ”2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதிலும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு மே 1-ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் இருந்து சென்றுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்தமாநிலம் செல்ல மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஷ்ராமிக் ரயில்கள் மூலம் இது வரை 35 லட்சம் பேர் சொந்த மாநிலம் சென்றுள்ளனர். பேருந்துகள் மூலம் 40 லட்சம்பேர் சென்றுள்ளனர்.

கடந்த மார்ச் 27-ம் தேதி மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியதில், புலம்பெயர் தொழிலாளர்களை மிகவும் கனிவுடன் அணுக வேண்டும். அவர்களை லாக்டவுன் காலத்தில் நடந்துசெல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மாநிலங்களுக்காக பேரிடர்மேலாண்மை நிதியிலிருந்து ரூ.11,092 கோடியை மத்திய அரசு விடுவித்தது. புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் களைவத்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையையும் மத்திய அரசு தொடங்கி, அதை இணைச் செயலாளர் அளவிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதே போல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டுவருகிறது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் புரியும் வகையிலும், அறியுமாறு அவர்களுக்காக மாநில அரசும், மத்திய அரசும் செய்துள்ள வசதிகள், உதவிகள் குறித்து மாநில அரசுகள் விளம்பரம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களை லாரி, டிரக் போன்றவற்றில் அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களுக்குள் ரயில்கள் மூலம் செல்லலாம் என்றும், மே 1-ம் தேதி முதல் மாநிலம் வி்ட்டு மாநிலத்துக்கு ரயில்கள் மூலம் செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டது”.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.