கரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160 மருத்துவ பரிசோதனைகள்

கரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160 மருத்துவ பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன.முடக்கநிலை அமல் காரணமாக பல ஆதாயங்கள் கிடைத்துள்ளன. நோய்பரவும் வேகம் குறைந்திருப்பது, இவற்றில் முதன்மை யானதாக உள்ளது. பெருமளவிலான நோய் தாக்குதல் எண்ணிக்கையும், மரணங்களும் இதன்மூலம் தவிர்க்கப் பட்டுள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயத்தில், முடக்கநிலை காலத்தில் சுகாதாரக் கட்டமைப்புகள் மேம்பாடு; ஆன்லைன் பயிற்சித் திட்டங்கள் மற்றும் இணையவழி கருத்தரங்குகள் மூலம் மனிதவள திறன் மேம்பாடு; பரிசோதனை வசதி அதிகரிப்பு; மருத்துவ சாதனங்கள் வழங்கும் நிலை, சாதனம், ஆக்சிஜன் கிடைப்பது அதிகரிப்பு; பொருத்தமான வழிகாட்டுதல்கள் வழங்குதல், தரநிலைகள் தயாரித்தல், நோய் அறியும் பரிசோதனைகள், ரசாயன மருந்துப் பரிசோதனை நடைபெறுகின்றன.

கோவிட்-19 மேலாண்மைக்கு தேவையான சுகாதார கட்டமைபுகள் முடக்கநிலை காலத்தில் வேகமாக உருவாக்கபட்டன. 2020 மே 27ம் தேதி நிலவரத்தின்படி 930 பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளில் 1,58,747 தனிமைப்படுத்தல் படுக்கைகள், 20,355 தீவிர சிகிச்சை பிரிவுப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க 69,076 படுக்கை வசதிகள் உள்ளன.

2,362 பிரத்யேக கோவிட் சிகிச்சை மையங்களில் 1,32,593 தனிமைப்படுத்தல் படுக்கைகள்; 10,903 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க 45,562 படுக்கை வசதிகள் உள்ளன. 10,341 தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் 7,195 கோவிட் கண்காணிப்பு மையங்களில் கோவிட் நோய் தாக்குதலைக் குணப்படுத்த 6,52,830 படுக்கைகள் உள்ளன.

மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு 113.58 லட்சம் என்-95 முகக்கவச உறைகள், 89.84 லட்சம் தனிப்பட்ட முழுஉடல் பாதுகாப்புக் கவச உடைகளை (பி.பி.இ.) வழங்கியுள்ளது. 435 அரசு ஆய்வகங்கள் மற்றும் 189 தனியார் ஆய்வகங்கள் (மொத்தம் 624 ஆய்வகங்கள்) மூலம் மருத்துவ பரிசோதனைத் திறன்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன.

கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கண்டறிய இதுவரையில் 32,42,160 மருத்துவப் பரிசோதனைகள் செய்யபட்டுள்ளன. நேற்றுமட்டும் 1,16,041 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

நாட்டில் இதுவரையில் 1,51,767 பேருக்கு நோய்த்தாக்குதல் கண்டறியப் பட்டுள்ளது. இதில் 64,426 பேர் குணமடைந்துள்ளனர். குணம் அடைந்தவர்கள் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளது. மரணவிகிதம் 2.86 சதவீதமாக உள்ளது. உலகளவில் இது 6.36 சதவீதமாக உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.