கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்

இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் வருடாந்திரக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத்திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம் எனவும் மோடி தெரிவித்தார். வளர்ச்சிக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்தும் தொழில் துறையினரிடையே மோடி ஆலோசித்துள்ளார். இந்தியாவில் எவ்வாறு அந்நிய முதலீடுகளை அதிகம்  ஈர்ப்பது, உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவது எப்படி என்பன போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்க பட்டுள்ளது.

இந்நிலையில், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைமாற்றி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகமாக்கி ஏற்றுமதியில் சிறந்து விளங்குவோம் என்று மோடி கூறியுள்ளார். மேலும், ஏசி, காலணி, தோல், ஃபர்னிச்சர் ஆகிய துறைகளில் 17 பில்லியன் டாலர் வரையிலான முதலீடுகளை ஈர்க்கும்திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய துறைகளில் இந்திய ரூபாய்மதிப்பில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபர்னிச்சர் துறையில் ரூ.75,000 கோடிக்கான முதலீடுகள் குறித்து ஆலோசிக்க பட்டுள்ளது. மேலும் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்க ரூ.45,000 கோடி செலவிடப் படவுள்ளது. தோல் காலணி உற்பத்தியை மேம்படுத்த 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடுகள் ஈர்க்கப் படவுள்ளன. ஏசி மற்றும் அது சார்ந்த பொருட்கள் சீனாவிலிருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதைத்தடுக்க இவற்றுக்கான இறக்குமதி வரியைப் பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஃபர்னிச்சர் உற்பத்தியை மேம்படுத்தவும் சிலகொள்கை மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.

மேற்கூறிய திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகளைச்சேர்ந்த நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளுடன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...