கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்

இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் வருடாந்திரக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத்திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம் எனவும் மோடி தெரிவித்தார். வளர்ச்சிக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்தும் தொழில் துறையினரிடையே மோடி ஆலோசித்துள்ளார். இந்தியாவில் எவ்வாறு அந்நிய முதலீடுகளை அதிகம்  ஈர்ப்பது, உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவது எப்படி என்பன போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்க பட்டுள்ளது.

இந்நிலையில், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைமாற்றி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகமாக்கி ஏற்றுமதியில் சிறந்து விளங்குவோம் என்று மோடி கூறியுள்ளார். மேலும், ஏசி, காலணி, தோல், ஃபர்னிச்சர் ஆகிய துறைகளில் 17 பில்லியன் டாலர் வரையிலான முதலீடுகளை ஈர்க்கும்திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய துறைகளில் இந்திய ரூபாய்மதிப்பில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபர்னிச்சர் துறையில் ரூ.75,000 கோடிக்கான முதலீடுகள் குறித்து ஆலோசிக்க பட்டுள்ளது. மேலும் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்க ரூ.45,000 கோடி செலவிடப் படவுள்ளது. தோல் காலணி உற்பத்தியை மேம்படுத்த 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடுகள் ஈர்க்கப் படவுள்ளன. ஏசி மற்றும் அது சார்ந்த பொருட்கள் சீனாவிலிருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதைத்தடுக்க இவற்றுக்கான இறக்குமதி வரியைப் பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஃபர்னிச்சர் உற்பத்தியை மேம்படுத்தவும் சிலகொள்கை மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.

மேற்கூறிய திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகளைச்சேர்ந்த நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளுடன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...