பொருளாதாரப் போர் தொடங்கியுள்ளது

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது, அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர் பார்க்கிறோம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்

பாஜக சார்பில் நடந்த ஜன் சம்வாத்காணொலி பேரணியில் நாக்பூரில் இருந்தவாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பாஜக தொண்டர்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் பொருளதாரம் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது. அரசுக்கு ஏறக்குறைய ரூ.10லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படு்ம் என எதிர் பார்க்கிறோம்.
கடந்த 55 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்ய முடியாத விஷயங்கள், செயல்கள் அனைத்தையும் நரேந்திர மோடி அரசாங்கம் கடந்த 5ஆண்டுகளில் செய்துள்ளது. பொருளாதாரப் போர் தொடங்கியுள்ளது. நம்முடைய கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் கரோனாவால் சிக்கலில் இருக்கின்றன, மிகப் பெரிய சிரமத்தையும், துன்பத்தையும் சந்திக்கிறார்கள்.

இந்தியஅரசின் வருவாயும் கரோனாவால் பாதிக்க பட்டுள்ளது. ரூ.200 லட்சம் கோடி ஜிடிபி கொண்ட நம்நாட்டில் பொருளா தாரத்தை மீட்க ரூ20 லட்சம் கோடி அளவுக்கு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பொருளதாார சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளோம்.

ரூ200 லட்சம் கோடி ஜிடிபில் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத்திட்டம், ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்றால் நினைத்துப்பாருங்கள் மத்திய அரசு இக்கட்டான சூழலைத்தான் எதிர்கொண்டுவருகிறது.

அனைவரும் கடினமான காலத்தை எதிர்கொண்டு வருகிறோம், சிக்கலை சந்தித்துவருகிறோம். இந்ததுன்பத்தை, சி்க்கலை நாம் எதிர்மறையாகவோ, வெறுப்புடனோ, அச்சத்துடனோ எதிர்நோக்கமுடியாது. கரோனா வைரஸை தன்னம்பிக்கையுடனும், நேர்மறை சிந்தனையுடனும் எதிர்கொள்கிறோம்.

கரோனா வைரஸுக்கு தடுப்புமருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். அதுவரை நாம் கரோனாவுடன் போராடவேண்டியது இருக்கும். தேசியவாதம் என்பது பாஜகவின் முன்னுரிமை, சித்தாந்தம். இந்தவிஷயத்தை முன்னிறுத்திதான் மாவோயிஸ்ட்களையும், தீவிரவாதிகளையும் மோடி அரசு அணுகுகிறது, இரும்புக் கரம்கொண்டு அடக்குகிறது.

முதல்முறையாக மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தபோது, மாவோயிஸ்ட்களையும், தீவிரவாதிகளையும் துணிச்சலுடன் அடக்கியது இதற்குமுன் வந்த அரசுகளால் அதைச் செய்யமுடியவில்லை.

காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370பிரிவு ரத்து, முத்தலாக் ரத்து, ராமர் கோயில் கட்டுவதற்கு தடைகளை அகற்றியது என மோடி அரசின் சாதனைகள் ஏராளம்

இ்வ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...