நுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிடம் தாரை வார்த்தவர்தான், மன்மோகன்சிங்

கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.  இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீனபடையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என தெரிகிறது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்ய கூடாது என்றும் கூறியிருந்தார். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்றுதுரோகம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் நூற்றுக்கணக்கான சதுர கிலோ மீட்டர்கள் இந்திய நிலப்பரப்பு சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டதை மறந்துவிட்டு, பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சிப்பதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மன்மோகன் சிங் அறிக்கைக்கு பதிலடியாக, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா வெளியிட்ட அறிக்கை: ராணுவவீரர்களை, மீண்டும் மீண்டும் அவமதிப்பதை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் நிறுத்தவேண்டும். இது மாதிரியான நேரங்களில் மட்டுமாவது, தேசப்பற்று என்பதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, திட்டமிட்டு சிதைக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் மாண்பு மற்றும் ராணுவத்தின் கம்பீரம் ஆகியவை, தற்போதைய தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது மீட்டெடுக்க பட்டுள்ளது.

பிரதமராக இருந்த போது, நுாற்றுக் கணக்கான இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் தாரை வார்த்தவர்தான், மன்மோகன்சிங். 2010லிருந்து, 2013 வரையில், 600க்கும் அதிகமான சீன ஊடுருவல்கள் நடந்த போது, பிரதமராக இருந்தவர் இவர்தான். தைரியமே இல்லாமல், 43 ஆயிரம் கி.மீ., பரப்பளவை, எந்தகட்சி, சீனாவுக்கு துாக்கித் தந்ததோ, அதேகட்சியை சேர்ந்தவர்தான், இந்த மன்மோகன்சிங். மன்மோகன் சிங், தன் சொந்தகட்சிக்கு, ஏதாவது புத்திமதியை சொல்வதே தற்போதைக்கு நல்லது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீது, ஒட்டுமொத்த இந்தியாவுமே நம்பிக்கை வைத்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...