பாதுகாப்புத் துறை குழுவில் பங்கேற்காத ராகுல் கேள்வி எழுப்பலாமா?

பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் ஒரு முறைகூட ராகுல் காந்தி பங்கேற்காத நிலையில், ராணுவத்தின் வீரம்குறித்து கேள்வி எழுப்பி, தேசத்தை சோர்வடையச் செய்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சாடியுள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவவீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தவிவகாரத்தில் ராகுல் காந்தி மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவருகிறார். இதற்கு பதிலடியாகவே பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி. நட்டா, டுவிட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கடுமையாகச் சாடி கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘ ராகுல் காந்தி இதுவரை பாதுகாப்புத் துறைக்கான நடாாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ஒரு முறைகூட பங்கேற்றது இல்லை. ஆனால், சொல்லவே வருத்தமாக இருக்கிறது, தொடர்ந்து நமது ராணுவவீரர்களின் வீரத்தைப் பற்றி கேள்வி எழுப்பி, தேசத்தை மனச்சோர்வுக் குள்ளாக்குகிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் இது போன்று செய்யமாட்டார்.

ராகுல்காந்தி புனிதமான அரச பரம்பரையில் வந்தவர். பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை குழுக்களில் பங்கேற்பதெல்லாம் பெரியவிஷயம் அல்ல, உத்தரவிட மட்டுமே செய்கின்றன. நாடாளுமன்ற விவகாரங்களைப் புரிந்துகொள்ள தகுதியான பலஉறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். ஆனால் அந்தவாரிசுக் குடும்பம் அத்தகைய தலைவர்களை ஒரு போதும் வளரவிட்டது இல்லை. உண்மையாகவே இதுவேதனை’ எனத் தெரிவித்துள்ளார்.

நட்டாவின் குற்றச்சாட்டுக்கு இன்னும் காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...