கொரோனாவில் இருந்து வேகமாக மீளும் நாடு இந்தியா

ஐக்கிய நாடுகள்சபை ஏற்படுத்தப்பட்டு, வரும் அக்டோபர் மாதத்துடன் 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதை யொட்டி ஐநா.வின் சமூக மற்றும் பொருளாதார கவுன்சில் அமர்வு இன்று நடைபெற்றது.

காணொலிகாட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், “கொரோனா வைரசின் தாக்கத்துக்கு பிறகு உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார நிலை” என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்

அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கு கல்வி, மருத்துவம், மின்சாரம், சத்துணவு, வீடு உள்ளிட்ட அனைத்துஅடிப்படை தேவைகளும் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் எனது தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டுவருகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் நாடுமுழுவதும் பொதுமக்களுக்காக மொத்தம் 40 கோடி வங்கி கணக்குகள் தொடங்க பட்டுள்ளன. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் குடிமக்கள் அனைவருக்கும்வீடு என்ற இலக்கு எட்டப்படும். மத்திய அரசின் சுய உதவிக்குழுக்களில் இடம்பெற்றுள்ள கோடிக்கணக்கான பெண்களின் மூலம் பலரதுவாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் உலக பொருளாதாரம் கடும்நெருக்கடியை சந்தித்துவரும் நிலையில், 20 லட்சம்கோடி மதிப்பீட்டில் பல்வேறு மெகா திட்டங்களை இந்தியா அறிவித்துள்ளது.

பிற நாடுகளை ஒப்பிடும்போது. இந்தியாவில் சுகாதாரமுறை சிறப்பாக உள்ளது. இதன்காரணமாக, கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவி்ல் அதிகமாக உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளோம்.

இதன்பயனாக, உலகிலேயே கொரோனாவில் இருந்து வேகமாக மீளும்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 150 நாடுகளுக்கு கொரோனா மருத்துவ உதவிகளை அளித்துவருகிறோம் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...