சீனாவை சம பலத்துடனே எதிர்கொள்கிறோம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், முக்கியநாடுகளுடனான உறவு வலுவாகவும், சிறப்பாகவும் உள்ளது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரி சமமாகவே எதிர்கொள்கிறோம்’ என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான தவறுகள், பொறுப்பின்மை ஆகியவற்றால், கடந்த ஆறுஆண்டுகளில், இந்திய வெளியுறவு கொள்கை, பொருளாதாரம், அண்டை நாடுகளுடனான நட்புறவு ஆகியவை, பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நாடு பலவீன மடைந்துள்ளதாக, காங்., – எம்.பி., ராகுல் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது டுவிட்டர்’ பக்கத்தில், தொடர்ச்சியான பதிவுகளை, நேற்று வெளியிட்டார்.

அதன் விபரம்: இந்தியாவுடன் நல்லுறவு பாராட்டும், பலமுக்கிய நாடுகளுடனான நட்பு, மிக வலுவாகவும், உயர்வாகவும் உள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன், தொடர்மாநாடுகளும், தலைவர்களுடனான சந்திப்புகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரிசமமாகவே இந்தியா எதிர்கொள்கிறது. இதுபற்றி, நிபுணர்களின் கருத்தை கேட்டாலே, உண்மை நிலவரம் புரியும்.

சீனா — பாக்., பொருளாதார பெருவழிசாலை, எல்லையில் சீனா அத்துமீறி சாலை அமைக்கும் முயற்சி, தென் சீன கடல் விவகாரம், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஐ.நா., தடை போன்றவற்றில், இந்தியா தன் நிலைப் பாட்டை, மிக வெளிப்படையாகவே பேசி வருகிறது.இலங்கை – சீனா இடையிலான அம்பன் தோட்டை துறைமுக ஒப்பந்தம், 2008ல் கையெழுத்தானது. அது பற்றி, நீங்கள் அப்போது கேள்வி எழுப்ப வேண்டியதுதானே. வங்கதேச உடனான எல்லை விவகாரம், 2015ல் முடிவுக்கு வந்தது. அது, பல வளர்ச்சிகளுக்கு வழி வகுத்தது.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...