சீனாவை சம பலத்துடனே எதிர்கொள்கிறோம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், முக்கியநாடுகளுடனான உறவு வலுவாகவும், சிறப்பாகவும் உள்ளது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரி சமமாகவே எதிர்கொள்கிறோம்’ என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான தவறுகள், பொறுப்பின்மை ஆகியவற்றால், கடந்த ஆறுஆண்டுகளில், இந்திய வெளியுறவு கொள்கை, பொருளாதாரம், அண்டை நாடுகளுடனான நட்புறவு ஆகியவை, பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நாடு பலவீன மடைந்துள்ளதாக, காங்., – எம்.பி., ராகுல் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது டுவிட்டர்’ பக்கத்தில், தொடர்ச்சியான பதிவுகளை, நேற்று வெளியிட்டார்.

அதன் விபரம்: இந்தியாவுடன் நல்லுறவு பாராட்டும், பலமுக்கிய நாடுகளுடனான நட்பு, மிக வலுவாகவும், உயர்வாகவும் உள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன், தொடர்மாநாடுகளும், தலைவர்களுடனான சந்திப்புகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரிசமமாகவே இந்தியா எதிர்கொள்கிறது. இதுபற்றி, நிபுணர்களின் கருத்தை கேட்டாலே, உண்மை நிலவரம் புரியும்.

சீனா — பாக்., பொருளாதார பெருவழிசாலை, எல்லையில் சீனா அத்துமீறி சாலை அமைக்கும் முயற்சி, தென் சீன கடல் விவகாரம், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஐ.நா., தடை போன்றவற்றில், இந்தியா தன் நிலைப் பாட்டை, மிக வெளிப்படையாகவே பேசி வருகிறது.இலங்கை – சீனா இடையிலான அம்பன் தோட்டை துறைமுக ஒப்பந்தம், 2008ல் கையெழுத்தானது. அது பற்றி, நீங்கள் அப்போது கேள்வி எழுப்ப வேண்டியதுதானே. வங்கதேச உடனான எல்லை விவகாரம், 2015ல் முடிவுக்கு வந்தது. அது, பல வளர்ச்சிகளுக்கு வழி வகுத்தது.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...