மோடி அரசின் திட்டங்கள் நாட்டின் வட கிழக்கு பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது. அந்தப்பகுதி மக்களின் தேவைகளையும் பூா்த்தி செய்கிறது என்று மத்திய வட கிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.
மிஸோரத்தில் கட்டப்பட்டிருக்கும் மாபெரும் உணவு பூங்காவை தில்லியில் இருந்தபடி காணொலி வழியில் திங்கள்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது:
2014-இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், நாட்டின் பிறவளா்ந்த பகுதிகளுக்கு இணையாக வடகிழக்கு பிராந்திய பகுதிகளை மேம்படுத்தும் வகையில் நமது ஒவ்வொரு முயற்சிகளும் இருக்க வேண்டும் என்று பிரதமா் கூறினாா்.
அந்த வகையில், மத்திய அரசின் திட்டங்கள் இப்போது வடகிழக்கு பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது. இப்பகுதி மக்களின் தேவைகளும் பூா்த்திசெய்யப்பட்டு வருகின்றன.
நாட்டின் மிகச்சிறிய மாநிலமான மிஸோரத்துக்கு வருகைதந்த பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 2017 டிசம்பரில் 60 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா்மின் திட்டத்தை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். அதன் மூலம், வடகிழக்கு பிராந்தியத்தில் சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது மிகைமின் மாநிலமாக மிஸோரம் மாறியுள்ளது.
அதுபோல, வடகிழக்கு பிராந்தியத்தின் முழுமையான வளா்சிக்காக மத்திய அரசு அா்ப்பணிப்புடன் திட்டங்களை வகுத்துவருகிறது. இந்த மிகச் சிறிய மாநிலத்தின் உயரிய மற்றும் பன்முக தன்மைகொண்ட கலாசார அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன என்பதால், இந்த மாநிலத்துக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டியத் தேவையும் உள்ளது.
இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த ஸோரம் மாபெரும் உணவுப் பூங்கா, மாநில விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் என்பதோடு இடைத்தரகா்களின் தலையீட்டையும் தடுக்கஉதவும் என்று அவா் கூறினாா்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |