மோடி அரசின் திட்டங்கள் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது

மோடி அரசின் திட்டங்கள் நாட்டின் வட கிழக்கு பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது. அந்தப்பகுதி மக்களின் தேவைகளையும் பூா்த்தி செய்கிறது என்று மத்திய வட கிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.

மிஸோரத்தில் கட்டப்பட்டிருக்கும் மாபெரும் உணவு பூங்காவை தில்லியில் இருந்தபடி காணொலி வழியில் திங்கள்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது:

2014-இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், நாட்டின் பிறவளா்ந்த பகுதிகளுக்கு இணையாக வடகிழக்கு பிராந்திய பகுதிகளை மேம்படுத்தும் வகையில் நமது ஒவ்வொரு முயற்சிகளும் இருக்க வேண்டும் என்று பிரதமா் கூறினாா்.

அந்த வகையில், மத்திய அரசின் திட்டங்கள் இப்போது வடகிழக்கு பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது. இப்பகுதி மக்களின் தேவைகளும் பூா்த்திசெய்யப்பட்டு வருகின்றன.

நாட்டின் மிகச்சிறிய மாநிலமான மிஸோரத்துக்கு வருகைதந்த பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 2017 டிசம்பரில் 60 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா்மின் திட்டத்தை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். அதன் மூலம், வடகிழக்கு பிராந்தியத்தில் சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது மிகைமின் மாநிலமாக மிஸோரம் மாறியுள்ளது.

அதுபோல, வடகிழக்கு பிராந்தியத்தின் முழுமையான வளா்சிக்காக மத்திய அரசு அா்ப்பணிப்புடன் திட்டங்களை வகுத்துவருகிறது. இந்த மிகச் சிறிய மாநிலத்தின் உயரிய மற்றும் பன்முக தன்மைகொண்ட கலாசார அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன என்பதால், இந்த மாநிலத்துக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டியத் தேவையும் உள்ளது.

இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த ஸோரம் மாபெரும் உணவுப் பூங்கா, மாநில விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் என்பதோடு இடைத்தரகா்களின் தலையீட்டையும் தடுக்கஉதவும் என்று அவா் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...