நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை பரப்பாதீர்

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனாவை எதிர் கொள்வதில் மக்களின் பங்கு, சுதந்திர தினவிழா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:

இன்றைய தினம் மிகவும் சிறப்புவாய்ந்தது. கார்கில் போர் நினைவு தினத்தில் நாம் வெற்றிபெற்ற நாளாகும். 21 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் கார்கில் தினத்தில் இந்திய ராணுவவீரர்கள் எல்லையில் வெற்றிக் கொடியை நிலைநாட்டினர். கார்கில்போர் நடந்த சூழ்நிலையை இந்தியா ஒருபோதும் மறக்காது. கார்கில் போரில் உயிர்நீத்த நமது வீரர்களின் கதைகளை தாய்மார்களின் தியாகத்தை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

நாட்டு நலனுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பரப்பாதீர்கள். போர் சூழ்நிலையில், நாம்செய்யும் செயல்கள், பேசும் சொற்கள் நமது வீரர்களின் மனதளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, வீரர்களின் மன வலிமையை அதிகரிக்கும் விதத்தில் நமது பேச்சு இருக்க வேண்டும்.

கரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் சிறப்பாக இருக்கிறது. அதேபோன்று இறப்பு எண்ணிக்கை நாட்டில் குறைவாகவே இருக்கிறது. அரசும், மக்களின் உயிர்களைகாக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதேநேரத்தில் கரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் அபாயம் இன்னும் போகவில்லை. எனவே நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அசௌகரியமாக இருந்தாலும், தொடர்ந்து முகக் கவசத்தை அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தூய்மையை பின்பற்றவேண்டும்.

அதேநேரத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் செவிலியர்கள் போன்றோரின் சேவையை சிந்தித்து பார்க்கவேண்டும். அவர்கள் மணிக்கணக்கில் பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனாவுக்கு எதிராக போராடும் அதேசமயத்தில் மற்றொரு பக்கம் தொழில், வேலை, படிப்பு என மற்ற விஷயத்திலும் கவனம்செலுத்த வேண்டும். நாடு முழுவதும் நகரத்திலிருந்து கிராமப்புறம்வரை அனைவரும் கரோனாவுக்கு எதிராக நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்முவின் த்ரேவா பகுதி கிராமப் பஞ்சாயத்து தலைவர் தனது பகுதியில் தனது சொந்தமுயற்சியில் 30 படுக்கைகள் கொண்ட ஒரு தனிமைப் படுத்தும் மையத்தை உருவாக்கியுள்ளார். மேலும் தன்னார்வலர்களுடன் இணைந்து தனது பஞ்சாயத்து முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

அதேபோன்று காஷ்மீரைச் சேர்ந்த ஜைதூனா பேகம் என்பவர் தங்கள்பகுதியில் இலவச முகக்கவசம், ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வழங்கிவருகிறார். கரோனா காலத்திலும் இளைஞர்களும் பெண்களும் தங்களுடைய திறமைகளைக் கொண்டு புதிய வழிமுறைகளை கையாள்கின்றனர்.

பிகார், அசாம் போன்ற மாநிலங்களில் பலபகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கான மீட்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத கசாயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனா தொற்று நிலவும் இதேசூழ்நிலையில் மற்ற நோய்களிலிருந்தும் நம்மை காத்து கொள்ள வேண்டியது அவசியம்.

வரவுள்ள சுதந்திர தினவிழாவில், கரோனாதொற்றில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற மன உறுதியை ஏற்போம்.

சுதந்திர தினத்தன்று பல மகத்தான மனிதர்களின் தியாகத்தை நினைவுகூற வேண்டும். அவர்களது தியாகத்தின் முயற்சியின் பலனாகவே நாம் இன்று இந்தநிலையை அடைந்திருக்கிறோம் என்று பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...