மீண்டும் பிள்ளையார் சுழி

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், அகில பாரத அளவில் புகழ்பெற்றார். அவரது வார்த்தைக்கு அவர் பேசுகின்ற மொழி தெரியாதவர்கள்கூட மதிப்பு கொடுத்தார்கள். அவரைக் கண்டு ஆங்கில அரசாங்கம் நடுங்கியது. ஆங்கிலேய அரசாங்கம் அவரை ஒரு வழக்கில் சிக்க வைத்து, கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் கைது செய்யப்பட்டார் என்றவுடன் நாடு கொந்தளித்தது.

பம்பாய் நகரில் 2 மாதங்கள் வரை ஸ்டிரைக் நீடித்தது. வழக்கை தானே வாதாடி வெற்றிபெற சட்டம் படித்தார் அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்! ஆங்கிலேயன் போட்ட வழக்கைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து விடுதலையானார். அவர் கைது செய்யப்பட்டதற்கு நாடே கொந்தளித்தது, ஆனால் அவர் விடுதலையாகி வரும்போது அவரை வரவேற்க ஒருவர்கூட சிறைவாசலுக்கு வரவில்லை!

தானாகவே வீடு வந்து சேர்ந்தார். நாடுமுழுவதும் சுதந்திர ஞான வேள்வியை கொண்டு செல்லும் சாதனமாக அவர் நடத்தி வந்த பத்திரிகையையும் அவரது நண்பர்கள் நிறுத்தியிருந்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத அந்தப் போராட்ட வீரர், மக்களை இன்னமும் நாம் முழுமையாகத் தயார்படுத்தவில்லை,

இது அவர்கள் தவறல்ல என்று எண்ணி, தனது பத்திரிகை அலுவலகம் சென்று மேஜை மேலிருந்த தூசியைத் தட்டி சுத்தம் செய்து பேப்பர், பேடை எடுத்து பத்திரிகை தலையங்கத்திற்கு எழுதத்துவங்கினார்.

தலைப்பு ""மீண்டும் பிள்ளையார் சுழி!''

மனங்கலங்காத அந்த வீரர் பாலகங்காதர திலகர் ஆவார். சுதந்திரம் நமது பிறப்புரிமை என்று முழங்கியவர் அவர்!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...