மீண்டும் பிள்ளையார் சுழி

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், அகில பாரத அளவில் புகழ்பெற்றார். அவரது வார்த்தைக்கு அவர் பேசுகின்ற மொழி தெரியாதவர்கள்கூட மதிப்பு கொடுத்தார்கள். அவரைக் கண்டு ஆங்கில அரசாங்கம் நடுங்கியது. ஆங்கிலேய அரசாங்கம் அவரை ஒரு வழக்கில் சிக்க வைத்து, கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் கைது செய்யப்பட்டார் என்றவுடன் நாடு கொந்தளித்தது.

பம்பாய் நகரில் 2 மாதங்கள் வரை ஸ்டிரைக் நீடித்தது. வழக்கை தானே வாதாடி வெற்றிபெற சட்டம் படித்தார் அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்! ஆங்கிலேயன் போட்ட வழக்கைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து விடுதலையானார். அவர் கைது செய்யப்பட்டதற்கு நாடே கொந்தளித்தது, ஆனால் அவர் விடுதலையாகி வரும்போது அவரை வரவேற்க ஒருவர்கூட சிறைவாசலுக்கு வரவில்லை!

தானாகவே வீடு வந்து சேர்ந்தார். நாடுமுழுவதும் சுதந்திர ஞான வேள்வியை கொண்டு செல்லும் சாதனமாக அவர் நடத்தி வந்த பத்திரிகையையும் அவரது நண்பர்கள் நிறுத்தியிருந்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத அந்தப் போராட்ட வீரர், மக்களை இன்னமும் நாம் முழுமையாகத் தயார்படுத்தவில்லை,

இது அவர்கள் தவறல்ல என்று எண்ணி, தனது பத்திரிகை அலுவலகம் சென்று மேஜை மேலிருந்த தூசியைத் தட்டி சுத்தம் செய்து பேப்பர், பேடை எடுத்து பத்திரிகை தலையங்கத்திற்கு எழுதத்துவங்கினார்.

தலைப்பு ""மீண்டும் பிள்ளையார் சுழி!''

மனங்கலங்காத அந்த வீரர் பாலகங்காதர திலகர் ஆவார். சுதந்திரம் நமது பிறப்புரிமை என்று முழங்கியவர் அவர்!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...