ராகுல் பேசியது மட்டும் சரியா

பிரதமர் மோடியை பொதுமக்கள் கம்புகொண்டு அடித்து விரட்டுவர் என ராகுல் பேசியது மட்டும் சரியா என காங்., கட்சிக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர்பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கட்டுப்படுத்துவதாக காங்., எம்.பி., ராகுல் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அவர் தனது டுவிட்டர் பதிவில், சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், பேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்றும் பதிவிட்டுள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக், ராகுலின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் பேஸ்புக் இந்தியாநிர்வாகம் தலையிடுவது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என, பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பர்கிற்கு காங்., கட்சி கடிதம் எழுதியுள்ளது. இதற்கு பா.ஜ., கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: காங்., தலைவர் சோனியாவும், ராகுலும் பிரதமர் மோடியை கடந்தகாலங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிரதமர் மோடியை பொதுமக்கள் கம்புகொண்டு அடித்து விரட்டுவார்கள் என ராகுல் பேசியுள்ளார். இது வெறுப்புபேச்சு இல்லையா என்பதை காங்., தெளிவுபடுத்த வேண்டும். பிறகட்சி தலைவர்களை தரக்குறைவாக விமர்சித்து வரும் காங்., தலைவர்களுக்கு இதுகுறித்து புகார் அளிக்க எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...