சம்ஸ்கிருதம் எந்த ஒரு இனத்துக்கோ மதத்துக்கோ மட்டும் சொந்தமானதள்ள

சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்தும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் நடந்த உலக சம்ஸ்கிருத மாநாட்டில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது: சம்ஸ்கிருத மொழி எந்த ஒரு இனத்துக்கோ

மதத்துக்கோ மட்டும் சொந்தமானது கிடையாது. குறுகிய மனப்பான்மையை ஒழிக்கக்கூடிய, விடுதலை உணர்வை வளர்க்கும் வகையிலான பண்பாட்டைப் பறைசாற்றும் மொழி .

சம்ஸ்கிருதத்தை நமது தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் அதனுள் பொதிந்திருக்கிறது. இன்றைக்கும் வாழ்ந்திருக்கும் மொழிகளுள் மிகப் பழமையானது சம்ஸ்கிருதம். இதை மதச் சடங்குகளுக்காகவும் வழிபாடுகளுக்காகவும் மட்டும் பயன்படும் மொழி என்று கருதிவிடலாகாது. அப்படிப்பட்ட தவறான புரிதல், கெüடில்யர், சரகர், சுஸ்ருதர், ஆரியப்பட்டர், வராகமிஹிரர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர் போன்றோரின் சீரிய சிந்தனைக்கும் படைப்புகளுக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.

கணிதம், மருத்துவம், தாவரவியல், வேதியியல், கலை, மொழியியல் என அனைத்து வகையான அறிவுப் பொக்கிஷங்களையும் சம்ஸ்கிருதம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. பல்வேறு ஆச்சாரியர்களும், அறிஞர்களும் தங்களது கருத்துகளையும் தத்துவங்களையும் புனிதமான வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் பதிவு செய்திருக்கின்றனர்.

இன்றைக்கும் முக்கியத்துவம் பெற்றிருக்கும், “உலகமே ஒரு குடும்பம்’ என்கிற கருத்தை விதைத்ததும் அவர்கள்தான். இந்த மொழியை வளப்படுத்தவும், பிரபலப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றார் பிரதமர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.