தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சி திமுக

தேசிய உணர்வுகளுக்கு எதிராகவும் தேச வளர்ச்சியில் அக்கறையற்றவர்களின் புகலிடமாகவும் திமுக இருக்கிறது என பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கபட்ட பின்னர் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்தசெயற்குழு நடைபெற்றது.

இதில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது: தமிழகம் கோவில்கள் நிறைந்தபூமி. உயரிய பண்பாட்டை கொண்டது. தேசவிடுதலைக்கு பாடுபட்ட எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் மண்இது. உலகம் முழுவதும் தொழில் முனைவோர்களாக தமிழர்கள் திகழ்கின்றனர். தமிழர்களின் உயரியபண்பாட்டுக்கு என் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் சட்ட சபையில் பாரதிய ஜனதா கணிசமான இடங்களை கைப்பற்றும். நாம் நமது வாக்குவங்கியை அதிகரிக்க வேண்டும்.

கொரோனாகால லாக்டவுன் என்பது அரசியல் கட்சிகளுக்கும்கூட லாக்டவுன் என்பதாகிவிட்டது. இருந்தபோதும் மக்களுக்கு என்னதேவை என்பதை உணர்ந்து தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் சீரியதலைமையில் கொரோனாவை எதிர்த்து நாம் போராடி வருகிறோம்.

இந்த தேசத்தையும் 130 கோடி மக்களையும் கொரோனாவுக்கு எதிராக உரியநேரத்தில் முடிவெடுத்து தயார்படுத்தியவர் நமது பிரதமர் மோடி. கொரோனா தொடங்கும்போது அதற்கான மருத்துவமனைகள் எதுவும் இல்லை. இன்று 1500 கொரோனா சிறப்பு மருத்துவ மனைகள் உருவாக்க பட்டுள்ளன. 12.5 லட்சம் படுக்கைகள் இன்று தயாராக உள்ளன. இந்தியாவில் 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாடுவிடுதலை அடைந்தது முதல் முறையாக சுதந்திரமாக பிரதமர் மோடியின் தலைமையில் புதிய கல்விகொள்கை உருவாக்கபட்டுள்ளது. 1968, 1986-ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கை என்பது வெறும் எண்களை மட்டுமே மாற்றியதாக இருந்தது. கொள்கை ரீதியாக எந்தமாற்றமும் கொண்டு வரவில்லை. தற்போதைய புதியகல்வி கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வியை உறுதி செய்திருக்கிறோம்.

தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக இருக்கிறது திமுக. நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது திமுக. இத்தகைய சக்திகளுக்கு தகுந்தபாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு ஜேபி நட்டா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...