”பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது, ‘பேஸ்புக்’கில் வெளியாகும் அவதுாறுகளுக்கு, அந்நிறுவன மூத்தஅதிகாரிகள் துணை போகின்றனர்,” என, மத்திய தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவி சங்கர்பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர், பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி, மார்க் ஜூகர்பர்கிற்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதன்விபரம்: பிரதமர் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் மீது, பேஸ்புக்கில் தொடர்ந்து அவதுாறு பரப்பப்படுகிறது. இதற்கு, இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் முக்கிய அதிகாரிகளே துணைபோகின்றனர். பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த அதிகாரிகளின் இந்தசெயல்களுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன், பேஸ்புக் பக்கங்கள் பல அழிக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகார்களுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், உண்மைக்கு மாறான, குறிப்பிட்டசெய்திகள் மட்டும் வெளியில் கசிய விடப் படுகின்றன.
இந்திய அரசியல் நடவடிக்கைகள் குறித்து புரளிகிளப்புவது கண்டனத்திற்குரியது. சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் விஷமிகள், வன்முறைக்கென ஆட்களை நியமித்து, பேஸ்புக்வாயிலாக, தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.
இந்திய அரசியலை ஸ்திரமற்றதாக ஆக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.எனவே, இத்தகைய குறைபாடுகளை நீக்கி, இந்தியாவில் சமூகம் மற்றும் பல்வேறு மதங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், நாடுசார்ந்த சமூக விதிமுறைகளை, பேஸ்புக் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |