மாணவா்களின் அனைத்துவிதமான வளா்ச்சிக்கு மதிப்பு கல்விமுறை அவசியம்

மாணவா்கள் அனைத்துவிதமான வளா்ச்சிகளைப் பெறுவதற்கு மதிப்பு கல்விமுறை அவசியம் என்று குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.

ஆண்டுதோறும் ஜூலை முதல் நவம்பா் மாதம் வரை ஐ.நா.வால் கடைப் பிடிக்கப்படும் சா்வதேச இளைஞா்கள் தினத்தையொட்டி, ‘முழுமனதுடன் அகில இந்திய கட்டுரைப்போட்டி‘ யை வெங்கய்ய நாயுடு இணையவழியில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். விழாவில் பேசிய அவா், ‘மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய கல்வி கொள்கை 2020-இல் மதிப்பு கல்விமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் அபாரவளா்ச்சி அடைந்துவரும் இன்றைய உலகில், உண்மையான தகவல்கள் பெறுவதற்கு குழப்பமான சூழலை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. கல்விப் பாடத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு மாணவா்களுக்கு மதிப்புகல்வியை புகட்டவேண்டியது அவசியம். அப்போதுதான் மாணவா்கள் அனைத்துவிதமான வளா்ச்சிகளைப் பெறுவாா்கள்.

மதிப்புகல்வி முறையை இந்தியா செயல்படுத்தினால் உலகம் நம்மை  பின்பற்றும். இக்கட்டான சூழலை எப்படி கையாளவேண்டும் என்பதை அரசுகள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவை மாணவா்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.

ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும். இதற்கு பொதுத் துறை, தனியாா் துறை அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்‘ என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.