நீட் மரணங்கள் எதிர் கட்சிகளால் தூண்டப்படும் கொலைகளே

மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான தகுதித் தேர்வான நீட் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது இந்த கொரோன பேரிடர் காலத்தில், மாணவர்களின் போக்குவரத்து, சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை கடந்து நடந்துள்ளது இதில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர் 3200 தேர்வு மையங்கள் மற்றும் ஒரு அறைக்கான மாணவர்கள் எண்ணிக்கை 25 இருந்து 12 என குறைப்பு என்று பல சவால்களை சந்தித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் சில மாணவர்களின் தற்கொலைக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது. இதற்குக் காரணம் மாணவர்களின் தன்னம்பிக்கையோ இயலாமையோ அல்ல. திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் பிண அரசியலே!.. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் தன்னம்பிக்கையை, படிக்கும் மனோவலிமையை ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு விதத்தில் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுதான் வருகின்றன. இந்த வருடம் வராது அடுத்த வருடம் தடுத்து நிறுத்திவிடுவோம் எனும் அறிக்கைகள், மிகவும் கடினமானது என்று உருவாக்கப்படும் தோற்றங்கள் எல்லாம், ஒரு சில நன்கு படிக்கும் மாணவர்களின் ஆர்வத்தை குலைக்கத்தான் செயகிறது. எனவே இது தற்கொலைகள் அல்ல, எதிர்க்கட்சிகளின் மோசமான செயல்பாடுகளால் செய்யப்பட கொலைகள் என்றே கூற வேண்டும்.

ஏனென்றால் நாட்டின் எந்த பகுதியிலும் தற்கொலைகளை காண முடிய வில்லை. தேசிய நீரோட்டத்தில் முழுமையாக சமீபத்தில் இணைந்த ஜம்மு காஷ்மீரில் இல்லை, கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என்று எங்கும் இல்லை தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த அவலம் ?. தமிழக மாணவர்கள் என்ன மனோ வலிமையில் குறைந்தவர்களா?, கல்வியறிவில் பின் தங்கியவர்களா?. போட்டித் தேர்வையே எதிர்கொள்ளாதவர்களா?,

மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பூர்ண சுந்தரி ஐஏஎஸ் தேர்வில்வெற்றிபெற வில்லையா?. சமீபத்தில் நிலச்சரிவில் தனது குடும்ப த்தையே மொத்தமாக பறிக்கொடுத்த ஹேமலதா நீட்டை தைரியமாக எதிர்கொள்ள வில்லையா?. ஏன் எதிர்க்கட்சிகள் இவர்களை எல்லாம் கொண்டாடுவது இல்லை. தன்னம்பிக்கைகளை விதைப்பது இல்லை. .

ஏனென்றால் எதிர் கட்சிகளின் நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே சுய நலனின், சுய லாபத்தின் வெளிப்பாடே.. அவர்களின் இந்த போராட்டங்கள் முதலில் மாணவர்களுக்காக அல்ல. கோடி கோடியாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொட்டிக்கொடுக்கும் கமிஷன்களுக்காக. சில அரசியல் காட்சிகளே பினாமி பெயரில் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் வசூலை வாரி குவிப்பதற்க்காக. நீட் தேர்வு இருப்பதனால்தான் தகுதி என்பது அடிப்படையாகியுள்ளது. மதிப்பெண் எடுத்தால் தான் மருத்துவம் என்ற நிலை வந்துவிட்டது. பார்டரில் பாஸ் ஆவோரெல்லாம் கோடிகளை கொட்டிக் கொடுத்து மருத்துவர் ஆகலாம் என்ற நம்பிக்கைக்கு உலை வைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் எண்ணி மாணவர்கள் கொண்டாட வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

நன்றி தமிழ்தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...