ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது .

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும்போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறிவருகிறது.  மாநிலத்தின்  அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள்  சமமாக விநியோகிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையாலும், உறுதியான விருப்ப முடிவாலும் தான் வரலாற்று தவறுகள் திருத்தப்பட்டது .

370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்வது வன்முறைக்கு வழிவகுப்பதுடன், ரத்தபூமியாக்கும் என்று அழிவை விரும்பும் சில தீர்க்கதரிசிகள் கூறியது தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஜம்மு & காஷ்மீரின் யூனியன் பிரதேசங்களில் ஹோலி, முஹர்ரம், ஈத், தீபாவளி போன்ற மதவிழாக்களாகட்டும் அல்லது குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசிய விழாக்களாகட்டும் அது மிகவும் அமைதியாக நடந்தது.

 

சிறப்பு நிலை மற்றும் சுயராஜ்யம் என்ற பெயரில், உண்மையிலேயே மூன்று தலைமுறைகளின் வம்சா வழி ஆட்சியின்தொடர்ந்தது,, பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தாததன் மூலம் அடிமட்டத்தில் சுயாட்சி மறுக்கப்பட்டது, இதை யூனியன் பிரதேச மக்கள் உணர்ந்துள்ளனர் . ஜம்மு காஷ்மீர் இல் துணைநிலை ஆளுநரின் புதியநிர்வாகத்தின் கீழ் பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட்டன, இதனால் உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் கிடைத்தது.

 

ஜம்மு-காஷ்மீர் குடியேற்ற விதிகள் அறிவிப்பு  ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு புதிய சகாப்தத்தின் விடியல் இந்த திருத்தம் சமத்துவத்தின் கொள்கை மற்றும் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இருந்தது என்பதை நிரூபிக்கும் . ஜம்மு-காஷ்மீரில் மூன்று தலைமுறை மக்களுக்கு நீதி மற்றும் கண்ணியத்துடன் வாழ உரிமை மறுக்கப்பட்டுள்ளது . மேலும் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் மற்றும் PoJK -யில் இருந்து இடம் பெயர்ந்த நபர்கள் தங்கள் நியாயமான உரிமைகளை மீட்டெடுத்துள்ளனர் .பல சாப்தங்களாக இருந்த பாகுபாடு நீக்கப்பட்டுள்ளது .

இந்தியாவின் பிரதமர்கள் ஐ.கே.குஜ்ரால் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் , பாரபட்சமான சட்டத்தின் காரணமாக அவர்கள் ஜம்மு-காஷ்மீரில் குடியேறத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்கள் பிரதமர்களாகியிருக்க மாட்டார்கள் . ஜம்மு-காஷ்மீரில் பணியாற்ற 30 முதல் 35 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவை அதிகாரிகள், நாள் முடிவில், மேலதிக மதிப்பீட்டிற்குப் பிறகு, வெளியேறவும், குடியேற வேறு இடத்தைத் தேடவும் கேட்டுக்கொள்ளப்படுவது முரணாகஉள்ளது. .  இது பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருப்பதற்கு முற்றிலும் முரணானது , அதாவது அங்கு மாநில கேடரின் அகில இந்திய சேவை அதிகாரிகள் குடியேற அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கான நிலங்களும் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்களுக்கும் இதேநிலைதான் .

ஆகஸ்ட் 5, 2019 க்குப் பிறகு, வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பொறுப்புகள் அதிகரித்துள்ளது , மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரின் 20 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் குறைதீர்க்கும் வலைதளங்களை நிறுவ உதவுகிறது . மேலும் புதிய ஆட்சி குடிமக்களை மையமாகக் கொண்டிருப்பது ஒருபுதிய விதிமுறையாகிவிட்டது . இதேபோல், நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பிற துறைகளில்  30-40 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கியுள்ள பல மேம்பாட்டுத் திட்டங்கள் விடியலைக் காணத் தொடங்கியுள்ளன,

டோக்ரியை ஒரு உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவதன் மூலம், மற்றொரு ஒழுங்கின்மை நீக்கப்பட்டது . மேலும், அடிமைத்தனமான, மந்தமான மற்றும் சுயநல மனநிலையிலிருந்து மக்கள் படிப்படியாக வெளியேறி, புதியசூழலின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள் .

நன்றி மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...