சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணிதொடரும் என பாஜக மாநில தலைவர் முருகன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதியவேளாண் சட்டத்தால் வரிகள் குறையும், நேரடிவர்த்தகம் ஊக்குவிக்கப்படும், வெளிநாடு, உள்நாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும், விளைபொருட்களை கள்ளச் சந்தையில் பதுக்க முடியாது, விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும், மாநிலம்விட்டு மாநிலம் சென்று விவசாயிகள் நேரடியாக விளை பொருட்களை விற்பனை செய்யலாம்.

புதிய சட்டம் விவசாயிகளின் சுமைகளைக் குறைக்கும் வகையிலும், விளைபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும்அமைந்துள்ளது. இந்த மசோதாக்களை நிறைவேற்றியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

புதிய மசோதாவால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கிசான்நிதியுதவித் திட்டத்தில் நடந்த மோசடி மீதான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

அதிமுக-பாஜக இடையே மனக் கசப்பு இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் கூட்டணிதொடரும். சசிகலா சிறையில் இருந்து விடுதலையானபின் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையை பொருத்தே அவரது நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...