விவசாயத் துறை முதலீடுகளை ஊக்கப் படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில்இருந்து, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீக்க வகைசெய்யும் அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்தமசோதாவை, 2020 ஜூன் 5-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மாற்றாக, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு. தான்வே ராவ்சாகிப் தாதாராவ், மக்களவையில் கடந்த 14-ம் தேதி அறிமுகம் செய்தார். இந்தமசோதா, மக்களவையில் கடந்த 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020, தனியார் முதலீட்டாளர்களுக்கு, தங்கள்வணிக நடவடிக்கைகளில் ஒழுங்குமுறை தலையீடுகளால், ஏற்படும் அச்சத்தை அகற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. உற்பத்தி செய்து, சேமித்துவைத்து, கொண்டு சென்று, விநியோகிப்பதில் சுதந்திரமான செயல்பாட்டுக்கு இது வழிவகுக்கும். இதன் மூலம், விவசாயத் துறையில், தனியார்துறை / அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க இது வகைசெய்யும். குளிர்பதன வசதிகள், உணவு விநியோகத்தில் நவீனமயமாக்கம் ஆகியவற்றையும் இது ஊக்குவிக்கும்.

ஒழுங்குமுறை சூழலைத் தளர்த்தும் அதே வேளையில், நுகர்வோரின் நலன்களை அரசு இதில் உறுதிசெய்துள்ளது. போர், பஞ்சம், அசாதரணமான விலை ஏற்றம், இயற்கை பேரிடர்கள் போன்ற சூழ்நிலைகளில், விவசாய உணவுப்பொருட்களை ஒழுங்குபடுத்தும் வசதி அதில் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மதிப்புகூட்டு நிறுவு திறனில் பங்கேற்போர், ஏற்றுமதி தேவைக்கு ஏற்ப, ஏற்றுமதியாளர்கள் இது போன்ற பொருட்களை சேமித்து வைப்பதற்கான வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம், விவசாயத்துறையில் முதலீடு செய்பவர்கள் ஊக்கமிழக்க மாட்டார்கள்.

மாநிலங்களவையில், இன்று இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு நடந்த விவாதத்திற்குப் பதிலளித்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு. தான்வே ராவ்சாகிப் தாதாராவ், சேமிப்பு வசதிகள் இல்லாததால், விவசாய விளைபொருட்கள் பெருமளவுக்கு வீணாவதை தடுக்க இந்தத்திருத்தம் அவசியமாகிறது . இந்த மசோதா, விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், நுகர்வோர், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கும் ஆக்க பூர்வமான சூழலை உருவாக்கும் , இது, நம் நாட்டை தன்னிறைவு பெற்றதாக மாற்றும், விவசாயத் துறையில், ஒட்டுமொத்த விநியோகச்சங்கிலி முறையை வலுப்படுத்தும். இந்தத்திருத்தம், இத்துறையில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் உறுதிமொழி இலக்கை எட்ட உதவுவதுடன், எளிதாக வர்த்தகம்புரியவும் வழி வகுக்கும்.

இந்தியா பெரும்பாலான விவசாய விளைபொருட்கள் உற்பத்தியில் உபரி நிலையை எய்தியுள்ள போதிலும், குளிர்பதனவசதிகள், சேமிப்பு கிடங்குகள், பதப்படுத்தும் வசதிகளில் முதலீடு குறைவாக இருப்பதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப்பெற இயலாத நிலை நிலவுகிறது.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தால், தொழில் முனைவோரின் ஊக்கம்குலைந்து, ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. அமோக அறுவடை காலங்களில், குறிப்பாக அழுகும் பொருட்களால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இந்தச் சட்டம் குளிர்பதன வசதிகள் மற்றும் நவீனமயமாக்கலில் முதலீட்டை ஈர்க்கும். இது, விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நிலையான விலையைப் பராமரிக்க உதவும். சந்தைகளில் போட்டிசூழலை உருவாக்குவதுடன், சேமிப்பு வசதிகள் குறைபாட்டால், விவசாய விளைபொருட்கள் வீணாவதையும் தடுக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...