தூய்மை இந்தியா திட்டத்தின் 6ம் ஆண்டை கொண்டாடும் மத்திய வீட்டு வசதி துறை

மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு , தூய்மை இந்தியா திட்டத்தின் 6வது ஆண்டுவிழாவை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கொண்டாடுகிறது.

இதை முன்னிட்டு ‘6 ஆண்டுகள் தூய்மை, ஒப்பிட முடியாதது’ என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமை தாங்குகிறார்.

தூய்மை இந்தியாதிட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் புதுமையான நடைமுறைகளை வெளிப்படுத்து வதற்காக இணையதளத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கிவைக்கிறார்.

தூய்மை இந்தியா திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மாநிலங்கள்/நகரங்கள் தங்கள் அனுபவம்/ அடுத்தகட்ட நடவடிக்கைகளை கூறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 4,327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளிகழிப்பிடம் இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

66 லட்சம் வீடுகளில் கழிவறைகள் மற்றும் 6 லட்சத்துக்கும்மேற்பட்ட சமுதாய கழிவறைகள் நிறைவடைந்துள்ளன. இது வரை 1,319 நகரங்களுக்கு திறந்தவெளி கழிப்பிடம் இல்லா + சான்றிதழ் மற்றும் 489 நகரங்களுக்கு திறந்தவெளி கழிப்பிடம்இல்லா ++ சான்ழிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன.

2,900க்கும் மேற்பட்ட நகரங்களில் கட்டப்பட்ட 59,900 கழிவறைகள் கூகுள்வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன. 97% வார்டுகளில் வீட்டுக்குசென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தூய்மை கணக்கெடுப்பு பணியில் 12 கோடிப்பேர் பங்கேற்றுள்ளனர். துப்பரவு பணியாளர்கள் அனைவருக்கும், கண்ணியமான வாழ்வாதாரம் அளிக்கப் பட்டுள்ளது.

முறைசாரா குப்பைசேகரிப்போர் 84,000 பேர் பிரதான வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளனர். துப்புரவு பணியாளர்கள் 5.5 லட்சம்பேர் பல்வேறு நலத்திட்டங்களில் இணைக்க பட்டுள்ளனர்.

திறன் மேம்பாடுக்காக 150க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் நடத்தப்பட்டன. இவற்றில், 3,200க்கும் மேற்பட்ட நகர்ப்புறஉள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துருப்பிடித்த இரும்புக்கரத்தை ...

துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும் ...

நிமிடங்களில் பாக், விமானப்படை த ...

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம் சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரத ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் வி� ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிடம் திரும்பும் நாள் வெகு ...

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்� ...

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிவேகமாக செயல்பட்டு ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...