புதுச்சேரியில் தாமரைமலரும்

வரும் சட்டப் பேரவை தேர்தலில் புதுச்சேரியில் தாமரைமலரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில நிர்வாகிகள் குழுகூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, பாஜக அலுவலகத்துக்கு இன்று (அக். 16) வந்திருந்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“பாஜகவில் இணைய விரும்பி பலதலைவர்கள், இதர கட்சி எம்எல்ஏக்கள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். எங்களின் அடிப்படை இலக்கு கட்சியைப் பலப்படுத்துவதுதான். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு முழுதோல்வியைடைந்துள்ளது. கரோனா காலத்தில் இது வெளிப்படையாகியுள்ளது. அதனால் தான் புதுச்சேரியை தமிழகத்துடன் மத்திய அரசு இணைக்க உள்ளதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசுக்கு அதுபோல்திட்டம் ஏதுமில்லை. தங்கள் தோல்வியை மறைக்கவே பாஜக மீது பொய் குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி சுமத்துகிறார். அதை எப்படி எழுப்புகிறார் என்று தெரியவில்லை. மத்தியஅரசுக்கு அதுபோல் திட்டமில்லை. பொய்யான குற்றச்சாட்டு.

பாஜக தலைமை அலுவலகமாக ராஜ்நிவாஸ் செயல் படுவதாகக் கூறும் முதல்வரின் குற்றச்சாட்டு தவறானது. மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் எனச் சாலையில் நாங்கள் போராடுகிறோம். நாங்கள் ஆளுநர் அலுவலகத்தை பயன்படுத்துவதில்லை. அதேபோல், புதுச்சேரியில் ஆளுநர் மாற்றம் உள்ளதா என்ற கேள்வியும் கட்சி அரசியலுக்குத் தொடர்பில்லாதது.

மோடியின் தலைமையை ஏற்போருடன் இணைந்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திப்போம். நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தேர்தல்தொடர்பான பிரச்சார வழிமுறைகளை வடிவமைப்போம்”.

இவ்வாறு சி.டி.ரவி தெரிவித்தார்.

பேட்டியின் போது பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

One response to “புதுச்சேரியில் தாமரைமலரும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...