எஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது

நாட்டில் எஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது என மத்திய எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

‘தற்சார்பு இந்தியா: ஊரக பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் எஃகு பயன் பாட்டை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்குக்கு எஃகுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் ஃபக்கான்சிங் குலாஸ்தே, வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

எஃகுத் தேவையை அதிகரிக்க, ஊரகபகுதியில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எஃகு, வேளாண்துறை, ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத் துறையைச் சேர்ந்தவர்களை இந்த இணைய கருத்தரங்கில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வேளாண் கட்டமைப்பு நிதி ரூ.10,000 கோடியை, முன்னுரிமை பிரிவில் இணைக்கப்பட்ட பல புதிய பிரிவுகளுக்கு வழங்கும்பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. நாடுமுழுவதும் 5000 பயோ-கேஸ் ஆலைகள் உருவாக்கப்படுகின்றன.

இதை முன்னுரிமை பிரிவில் ரிசர்வ்வங்கி சமீபத்தில் சேர்த்துள்ளது. அரிசியிலிருந்து எத்தனால் எடுக்கும் பணியிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். அனைவருக்கும் வீடுதிட்டம், கிராம சாலைகள் முதலீடுதிட்டம், ரயில்வே கட்டமைப்பு மேம்பாடு, விவசாயத் துறைக்கான உந்துதல் ஆகியவை எஃகுத் தேவையை அதிகரிக்கும். நாட்டில் எஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், கிராமப்புற இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது. இது ஊரகவளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை உறுதிசெய்யும்.இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், ‘‘தற்சார்பு இந்தியாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி விடுத்த அழைப்பு, தற்சார்பு கிராமங்கள் வழியாகச் செல்கிறது. கிராமங்கள் மற்றும் தற்சார்பை வலுப்படுத்துவதில் எஃகு முக்கியபங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, ஊரக தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஊக்கமளிப்பதாக உள்ளது. அரசின்கொள்கை திட்டங்களால், கிராம மக்களின் செலவு திறன் மேம்பட்டுள்ளது. ஊரக பொருளாதாரம் வளர்வது, சிறந்த எஃகு பயன் பாட்டுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்”, என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஃபக்கான் சிங் குலாஸ்தே, ‘‘ கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பலநடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.

One response to “எஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...