பரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்

பரூக் அப்துல்லா, மெஹபூபாமுப்தி ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட ஆறு கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதற்காக இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தலைவராகவும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, துணைத்தலைவராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, காஷ்மீர் கொடி, தேசியகொடி குறித்து மெஹபூபா முப்தி சர்ச்சைகருத்தை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்தியமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெஹபூபா முப்தி மற்றும் பரூக்அப்துல்லா ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள். அவர்களில் ஒருவர் சீனாவின் உதவியுடன், 370வது சட்டப்பிரிவை நாங்கள் மீண்டும் கொண்டுவருவோம் என கூறுகிறார். சீனா, நம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தசூழலில் இதுபோன்ற பேச்சுகளை வெளியிடும் இவர்கள் சர்வதேச சமூகத்திற்கு என்ன செய்தியை கூறவருகிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...