பரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்

பரூக் அப்துல்லா, மெஹபூபாமுப்தி ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட ஆறு கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதற்காக இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தலைவராகவும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, துணைத்தலைவராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, காஷ்மீர் கொடி, தேசியகொடி குறித்து மெஹபூபா முப்தி சர்ச்சைகருத்தை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்தியமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெஹபூபா முப்தி மற்றும் பரூக்அப்துல்லா ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள். அவர்களில் ஒருவர் சீனாவின் உதவியுடன், 370வது சட்டப்பிரிவை நாங்கள் மீண்டும் கொண்டுவருவோம் என கூறுகிறார். சீனா, நம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தசூழலில் இதுபோன்ற பேச்சுகளை வெளியிடும் இவர்கள் சர்வதேச சமூகத்திற்கு என்ன செய்தியை கூறவருகிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...