பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்துவருவதால், அக்., மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி வசூல், 1.05 லட்சம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த, எட்டுமாதங்களில் முதல் முறையாக, 1 லட்சம்கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.ஜிஎஸ்டி., வசூல் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த அக்டோபர் மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., வசூல், 1.05 லட்சம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு, அக்.,ல், 95 ஆயிரத்து, 379 கோடி ரூபாய் வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, பிப்.,ல் 1.05 லட்சம்கோடி ரூபாயாக, ஜிஎஸ்டி., வசூல் இருந்தது. கொரோனா வைரஸ்பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் பிறகு, வரிவசூல் குறைந்தது.இந்நிலையில், கடந்த எட்டுமாதங்களில், தற்போது முதல் முறையாக, ஒருலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது, ஜிஎஸ்டி., வசூல்.பொருளாதார நடவடிக்கைகள் மீண்டுவருவதுடன், அதிக வளர்ச்சியை நோக்கி நகர்வதையே இதுகாட்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வருவாய், அக்டோபரில், 6,901 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டை ஒப்பிடும் போது, 13 சதவீதம் அதிகம்
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |