அத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும்

அத்வானிக்கு பாரதரத்னா விருது வழங்கக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கர மூர்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி 1927ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பிரிக்கப்படாத இந்தியாவில் கராச்சியில்பிறந்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்குவந்தது.

அத்வானி நேற்று தன் 93-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். இதில் பிரதமர் மோடி அத்வானியின் இல்லத்துக்கு நேரில்சென்று வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானியை அவரது இல்லத்திற்குசென்று வாழ்த்தினர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தொண்டர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் அத்வானி ‘வாழும் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் அத்வானிக்கு பாரதரத்னா விருது வழங்க கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் டி.எச்.சங்கரமூர்த்தி கூறியதாவது:

“உங்களுக்குத்தெரியும். லால் கிருஷ்ணா அத்வானி கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர். ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதாகட்சி ஆகியவற்றின் மூலம் தாய் நாட்டுக்காக அவர் செய்தசேவை, தியாகம் மற்றும் பங்களிப்பு ஒருதனித்துவமான விஷயம்.

அவரது தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கையில் கறைபடியாமலும் நேர்மையாகவும், மிகவும் நம்பகத் தன்மை கொண்ட ஒரு தலைவராகவும் விளங்குகிறார். ஒரு தலைவராக தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஏராளமான அறிவும் அனுபவமும் கொண்டவர். நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளக் கூடிய அத்தகைய ஓர் உயர்ந்தமனிதராக அத்வானி திகழ்கிறார்.

அத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் குறிப்பாக ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களின் தீவிர விருப்பமாகும். அவர் எல்லா வகையிலும் சிறந்தவர், சரியானவர், புகழ்பெற்றவர். கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, அத்வானிக்கு பாரதரத்னா விருதை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு டி.எச்.சங்கர மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...