சானிடைசர் பாட்டில் உற்பத்தியில் தன்னிறைவு

கொவிட்-19 பெருந்தொற்றால் நமது நாட்டில் “ஹாண்ட் சானிடைசர்“ எனப்படும் கைகளில் தடவிக்கொள்ளும் கிருமிநாசினியின் தேவை பெருமளவில் அதிகரித்ததால் அதனை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகளின் தேவையும் கூடியது. இதனை ஈடுகட்டுவதற்கு சிறுகுறு நடுத்தர தொழில்துறை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளாலும், நடவடிக்கைகளாலும் இன்று சானிடைசரை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகள் தயாரிப்பதில் நமதுநாடு தன்னிறைவு பெற்றுள்ளது. ஏற்றுமதி செய்யும் நிலையையும் எட்டியுள்ளது. பிரதமரின் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்களின் விளைவாக இது சாத்தியபட்டுள்ளது. சிறு குறு நடுத்தரதொழில் துறையின் இந்த முயற்சிகளையும், சாதனைகளையும் அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.

 

பெருந்தொற்று பரவத்தொடங்கிய ஆரம்பத்தில், சானிடைசரை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகள் ஆகியவற்றின் தேவை நாளொன்றுக்கு 50 லட்சமாக இருந்தது. ஆனால் நமதுநாட்டின் உற்பத்தித்திறன் நாளொன்றுக்கு 5 லட்சமாகத்தான் இருந்தது. இதனால் பிற நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக பாட்டில்களின் விலையும், சானிடைசர் விலையும் அதிகரித்தது.

இந்நிலையில், சானிடைசரை பேக்செய்யும் பம்ப்புகள், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான அச்சுகளை உருவாக்குவதற்காகவும், அதற்கான இயந்திரங்களை வாங்கு வதற்காகவும் மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம், தனது தொழில் நுட்ப மையங்களுக்கு ரூ.26 கோடியை ஒதுக்கியது.
இந்ததொழில்நுட்ப மையங்கள் இரண்டு விதமான அச்சுகளை உருவாக்கி, உற்பத்தி நிறுவனங்களுக்கு அளித்தன.இதனால் இன்று நாளொன்றுக்கு 40 லட்சம் சானிடைசர் பொதிகலன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

2020, ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.30 ஆக இருந்த சானிடைசர் கலனின்விலை தற்போது ரூ.5.50 ஆக குறைந்துள்ளது. பல இந்திய நிறுவனங்கள் சானிடைசர் கலன்களை உற்பத்திசெய்ய துவங்கியுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...