சானிடைசர் பாட்டில் உற்பத்தியில் தன்னிறைவு

கொவிட்-19 பெருந்தொற்றால் நமது நாட்டில் “ஹாண்ட் சானிடைசர்“ எனப்படும் கைகளில் தடவிக்கொள்ளும் கிருமிநாசினியின் தேவை பெருமளவில் அதிகரித்ததால் அதனை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகளின் தேவையும் கூடியது. இதனை ஈடுகட்டுவதற்கு சிறுகுறு நடுத்தர தொழில்துறை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளாலும், நடவடிக்கைகளாலும் இன்று சானிடைசரை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகள் தயாரிப்பதில் நமதுநாடு தன்னிறைவு பெற்றுள்ளது. ஏற்றுமதி செய்யும் நிலையையும் எட்டியுள்ளது. பிரதமரின் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்களின் விளைவாக இது சாத்தியபட்டுள்ளது. சிறு குறு நடுத்தரதொழில் துறையின் இந்த முயற்சிகளையும், சாதனைகளையும் அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.

 

பெருந்தொற்று பரவத்தொடங்கிய ஆரம்பத்தில், சானிடைசரை பேக்செய்யும் பாட்டில்கள், பம்ப்புகள் ஆகியவற்றின் தேவை நாளொன்றுக்கு 50 லட்சமாக இருந்தது. ஆனால் நமதுநாட்டின் உற்பத்தித்திறன் நாளொன்றுக்கு 5 லட்சமாகத்தான் இருந்தது. இதனால் பிற நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக பாட்டில்களின் விலையும், சானிடைசர் விலையும் அதிகரித்தது.

இந்நிலையில், சானிடைசரை பேக்செய்யும் பம்ப்புகள், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான அச்சுகளை உருவாக்குவதற்காகவும், அதற்கான இயந்திரங்களை வாங்கு வதற்காகவும் மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம், தனது தொழில் நுட்ப மையங்களுக்கு ரூ.26 கோடியை ஒதுக்கியது.
இந்ததொழில்நுட்ப மையங்கள் இரண்டு விதமான அச்சுகளை உருவாக்கி, உற்பத்தி நிறுவனங்களுக்கு அளித்தன.இதனால் இன்று நாளொன்றுக்கு 40 லட்சம் சானிடைசர் பொதிகலன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

2020, ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.30 ஆக இருந்த சானிடைசர் கலனின்விலை தற்போது ரூ.5.50 ஆக குறைந்துள்ளது. பல இந்திய நிறுவனங்கள் சானிடைசர் கலன்களை உற்பத்திசெய்ய துவங்கியுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...