ஆயுஷ் ஆன்லைன் விநாடிவிநா

மத்திய அரசின் கல்வி அமைச்சகமானது 5-ஆவது ஆயுர்வேத தினத்தையொட்டி ஆன்லைனில் விநாடிவிநா போட்டியை நடத்துகின்றது. அகத்தியரின் பிறந்த நட்சத்திரம் சித்தமருத்துவ தினமாகக் கொண்டாடப் படுவதைப் போல தன்வந்திரியின் பிறந்த நட்சத்திரத்தை ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத தினமாகக் கொண்டாடுகின்றது. கடந்த 13 ம் தேதிதான் 5-ஆவது ஆயுர்வேததினம் நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிரதம மந்திரி அன்றைய தினம் (13.11.2020) ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தையும் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதகல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

மாணவர்களிடையே ஆயுர்வேத மருத்துவமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஆயுர்வேத தினத்தை வாய்ப்பாகக் கருதி ஆன்லைன் விநாடிவிநா போட்டியை அறிவித்து 13.11.2020 ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றது.

”காற்றைத் தூய்மைப் படுத்துவதில் தாவரங்களின் பயன்பாடு & ஆயுர்வேதம் மூலம் கோவிட்-19 தொற்றைக் கையாளுதல் “ என்ற தலைப்பிலான இந்த ஆன்லைன் விநாடிவிநா போட்டியில் 5 நிமிடங்களில் 20 கேள்விகளுக்குப் பதில்அளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 20 ஆகும். தவறானவிடைக்கு மதிப்பெண் கழித்து கொள்ளப்படமாட்டாது. ஏற்கனவே தொகுத்து வைக்கப்பட்டுள்ள கேள்வி வங்கியில் இருந்து கேள்விகள் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேட்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் உடனடியாகக் கல்விஅமைச்சகத்தின் மின் – ன்றிதழ் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு தகுதிச்சான்றிதழை என்சிஇஆர்டி நிறுவனம் வழங்கும். குறைந்த நேரத்தில் அதிகபட்ச சரியானவிடைகளை அளித்தவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தப்போட்டியில் 11 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒருமுறை மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் http://quiz.mygov.in என்ற இணைய முகவரிக்குச்சென்று போட்டிக்கான பக்கத்தைத் தேர்ந்தெடுத்து பெயர், முகவரி, மொபைல் எண், ஆதார் எண் மற்றும் இ-மெயில் ஆகியவற்றை உள்ளீடுசெய்துவிட்டு போட்டிக்கான கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கலாம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...