மாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்

தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இது வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. நிவர் என்று பெயரிடப் பட்டிருக்கும் இந்தப்புயல், நாளை மறுதினம் 25-ம் தேதி மாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம் என்றும், அப்போது சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் பகுதிகளில் சூறாவளியும்வீசும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி இந்த புயல் சென்னையில் இருந்து 520 கி.மீ தொலைவில் நிலைப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல்எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதிலும் இருக்கும் கடலோர கிராமங்களையும், தற்காலிகத்தங்கும் முகாம்களையும் ஆய்வுசெய்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர், அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, “கடலூரில் தற்சமயம் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. உள்ளூர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 278 இடங்கள் பாதிக்கப்படக்கூடியவை. அதில் 92 இடங்கள் மிக அதிகமாகப் பாதிப்புகளை சந்திக்கக்கூடியவை. அதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்களை 19 மண்டல அலுவலர்கள் மூலம் பாதுகாப்பான இடங்கள் மற்றும் புயல் மையங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். மாவட்டத்தில் 28 புயல்மையங்களும், 14 பல்நோக்கு மையங்களும், 191 தற்காலி தங்குமிடங்களையும் அமைத்திருக்கிறோம்.

குடிமைப்பொருள் துறையின் மூலம் 16 இடங்களில் நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். மாவட்டம் முழுவதிலும் இருக்கும் புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு முகாம்களாக மாற்றும்பணிகளை நேற்றே தொடங்கிவிட்டோம். மாநிலபேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 220 பேர் அந்தந்தப் பகுதிகளில் தயராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். தேவைப்படும்போது இவர்கள் மண்டல குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இவர்களைத் தவிர தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 126 வீரர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதில் 3 குழுக்கள் கடலூரிலும், மூன்றுகுழுக்கள் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 180 ஜென்செட்டுகள், 180 ஜெனரேட்டர்கள், 180 ஜே.சி.பி இயந்திரங்கள், 1 லட்சம் மணல் முட்டைகள், 100 டிரான்ஸ்பார்மர், மின் இணைப்புக் கம்பிகள் அனைத்தும் தயாராக இருக்கின்றன. மேலும் மீன்வளத் துறை மூலம் 59 ஃபைபர் படகுகள், 18 ரப்பர் படகுகள், 4,500 லைஃப் ஜாக்கெட்ஸ் (பாதுகாப்பு ஆடைகள்) தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் முழுவதிலும் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தபடகுகளை இயக்குவதற்கும் அந்தந்த பகுதிகளில் ஆள்கள் தயாராக இருக்கிறார்கள்.

நவம்பர் 21-ம் தேதியில்இருந்தே கடலுக்குள் செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு நாங்கள் கொடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில், யாரும் கடலுக்குள் செல்லவில்லை. அவர்களின் படகுகள், வலைகள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். தற்காலிக பாதுகாப்பு மையங்களில் இட்லி மாவுகூட அரைத்து வைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...