சீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொடரும்

தற்போதைய பெருந்தொற்று காலத்திலும் சீர்திருத்தங்கள் உத்வேகத்துடன் மேற்கொள்ள பட்டதாகவும், இவை எதிர்காலத்திலும்தொடரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியதொழில் கூட்டமைப்பான சிஐஐ ஏற்பாடு செய்திருந்த தேசிய பன்னாட்டு நிறுவனங்கள் மாநாடு 2020-இல் கலந்துகொண்டு பேசியவர் இதனைத் தெரிவித்தார்.

அரசின் பங்குகளை விற்பனைசெய்தல் மற்றும் நிதித்துறையை மேலும் செம்மையாக்குவது உள்ளிட்டவை குறித்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். “அனைத்து தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள், பெரிய, நடுத்தர மற்றும் சிறியநிறுவனங்கள் ஆகியவை வர்த்தகத்தை மேற்கொள்வதில் மீட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவை முதலீட்டுக்கு உகந்தநாடாக மாற்றுவதற்குத் தேவையான சரியான கொள்கைகள் உருவாக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்”, என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.

தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ் அரசு அறிவித்துள்ள சீர்திருத்தங்களின்படி அணுசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட 9 துறைகளில் அந்நிய முதலீடுகளுக்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களினால் இந்தியா தனது உள்நாட்டுபோட்டி மனப்பான்மையை அதிகப்படுத்தி, உலக வர்த்தகத்தின் ஓர் முக்கிய அங்கமாக உருவாகும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

இந்தியாவுக்கு வெளியில்இருந்து செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக பன்னாட்டு நிறுவனங்களுடன் உரையாடி அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்டுவருகிறார். அரசின் சீர்திருத்தங்கள் மற்றும் வரி சலுகைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிதியகங்கள் தேசியகட்டமைப்புத் திட்டங்களில் அரசுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...