மாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப் படவுள்ளன

அசாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான உதவி மையத்தை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கிவைத்தார். இதன் மூலம் 4,147 பயனாளிகளுக்கு, ரூ.261.15 லட்சம் மதிப்பிலான 7,585 உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிபொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,551 மாற்றுத் திறனாளிகளுக்கும், ராஷ்ட்ரிய வயோஸ்ரீ திட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள் 596 பேருக்கும் உதவிபொருட்கள் வழங்கும் முகாமை, அசாம் மாநிலத்தின் நகான் நகரில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் காணொலிகாட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்தமுகாம், அசாமின் நகான் நகரில் உள்ள எல்பின்ஸ்டோன் பிபாபவனில் நடத்தப்பட்டது.

இங்கு மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மூன்றுசக்கர வண்டி, சர்க்கர நாற்காலி, ஊன்று கோல், ஸ்மார்ட் குச்சிகள், ஸ்மார்ட்போன்கள், காதுகேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன.

அசாமில் வட்டார அளவில் நடத்தப்படும் உதவி முகாம்களில், 4,147 பயனாளிகளுக்கு, ரூ.261.15 லட்சம் மதிப்பிலான 7,585 உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தவார்சந்த் கெலாட் பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கு, பிரதமர் தலைமையின் கீழ், சமூக நீதித்துறை அமைச்சகம் புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. மாற்று திறனாளிகளுக்கான பிரிவு 7-லிருந்து 21 ஆக அதிகரிக்கபட்டுள்ளது. அரசுவேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு 3-லிருந்து 4 சதவீதமாகவும், கல்வியில் 5 சதவீதமாகவும் அதிகரிக்கபட்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப்பட்ட அடையாளஅட்டைகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...