உலகத்தரம் வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன் படுத்துவதைப் புத்தாண்டு தீா்மானமாக மக்கள் ஏற்கவேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நடப்பாண்டின் கடைசி ‘மனதின்குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடி வானொலிவாயிலாக மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக ‘உள்ளூா் பொருள்களை ஆதரிப்போம்’ என்ற இயக்கத்தை பாஜக தலைமையிலான மத்தியஅரசு முன்னெடுத்தது. அதற்கு மக்கள் பெரும்ஆதரவு அளித்தனா். அதேபோல், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.

அப்பொருள்களுக்கு மாற்றாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களையே பயன்படுத்துவோம் என்பதைப் புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்க வேண்டும். நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு மக்கள் அந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும்.

உலகத்தரம் வாய்ந்த பொருள்களை நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவேண்டும். தொழில்முனைவோரும், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களும் அதற்கு முன்வரவேண்டும். அதே வேளையில், அப்பொருள்களின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.

 

தெரிந்தோ தெரியாமலோ வெளிநாட்டுப் பொருள்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். அவைகுறித்த பட்டியலைத் தயாா்செய்து, அவற்றுக்கு மாற்றாக உள்ள இந்திய பொருள்களை மக்கள் கண்டறியவேண்டும். நம் நாட்டு மக்களின் உழைப்பில் உற்பத்தியான பொருள்களை மட்டுமே மக்கள் பயன்படுத்தவேண்டும். அதற்கு மனதளவில் மக்கள் தங்களைத் தயாா்படுத்திகொள்வது மிகவும் அவசியம்.

ஜம்மு-காஷ்மீரில் உற்பத்தியாகும் குங்குமப்பூ உள்ளிட்டவற்றை உலகளவில் பிரசித்தியடைய செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு புவிசாா்குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில் கரோனா நோய்த்தொற்று பரவல்காரணமாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை ஒழிப்பது தொடா்பாக கவனம்செலுத்த முடியாமல் போனது. ஆனால், அத்தகைய பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதையும் புத்தாண்டு தீா்மானமாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டில் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை கடந்த 2014-2018-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமாா் 7,000-லிருந்து 12,852-ஆக அதிகரித்துள்ளது. முக்கியமாக நாட்டின் மத்தியபகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும்.

கடந்த சிலஆண்டுகளில் நாட்டில் சிங்கம், புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துவருகிறது. வனப்பரப்பும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் நடவடிக்கைகள் மட்டும் காரணமல்ல. மக்கள், தன்னாா்வ அமைப்புகள் உள்ளிட்ட பலரின் உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது.

‘மனதின்குரல்’ நிகழ்ச்சி தொடா்பாக மக்களிடம் கருத்துகேட்டிருந்தபோது, கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் மக்களின் ஒற்றுமையுணா்வைப் பெரும்பாலானோா் பாராட்டியிருந்தனா். ‘பொதுமுடக்கம்’ என்பதை மக்கள் கண்டிராத சூழல் முன்பு இருந்தது. ஆனால், நோய்த்தொற்றுக்கு எதிராக போராடவேண்டிய சூழலில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டியிருந்தது. அதற்கு மக்கள் போதுமான ஆதரவளித்தனா்.

நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் காப்பதற்கு பலா் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனா். இந்நேரத்தில் மாதா குஜாரி, குரு கோவிந்த் சிங், குரு தேக் பகதூா் உள்ளிட்டோரை நினைவுகூா்ந்து அஞ்சலிசெலுத்துகிறேன். அவா்களது தியாக உணா்வுக்கும் இரக்க குணத்துக்கும் நாம் அனைவரும் கடன் பட்டுள்ளோம் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...