நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்

திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்கவேண்டும் என்று மோடி வலியுறுத்தி உள்ளார்.

ஆண்டுதோறும் தைமாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப்பொங்கல் அன்று தெய்வபுலவர் திருவள்ளுவரின் நாளாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் திருவள்ளுவரின் பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் திருவள்ளுவர் தினத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழில் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு தலைவணங்குகிறேன். திருவள்ளுவரின் சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.

அவரதுலட்சியங்கள் தலைமுறைகளை கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. நாடுமுழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...