சசிதரூர், ராஜ்தீப்சர் தேசாய் உள்ளிட்ட பலர் மீது தேச துரோக வழக்கு

காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப்சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது போலீசார் தேசதுரோக பிரிவு, சதிசெய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தியபேரணி வன்முறை வெடித்தது. அதில், விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். ஆனால், போலீசார்சுட்டதில் விவசாயி உயிரிழந்ததாக  தவறாக வெளியான தகவலை, சசிதரூர் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவுசெய்தனர்.

ஆனால், டிராக்டர் பேரணியின்போது டில்லி போலீசார் ஒருதுப்பாக்கி குண்டைகூட சுடவில்லை. விவசாயி டிராக்டர் கவிழ்ந்தே உயிரிழந்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கமளித்து, அதுகுறித்த வீடியோவையும் வெளியிட்டனர். அந்த வீடியோவில், விவசாயிகள் சென்ற டிராக்டர் போலீசாரின் தடுப்பில் மோதிகவிழ்ந்தது. இதில், விவசாயி உயிரிழந்த காட்சிகள் பதிவாகியது. உயிரிழந்த விவசாயி பிரேத பரிசோதனையின் போதும், உடலில் எந்த வித துப்பாக்கி குண்டு காயம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, நொய்டாவை சேர்ந்த அர்பித்மிஸ்ரா என்பவர், நொய்டா போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில் ‛‛ குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் போராட்டக்காரர் ஒருவர் மரணம்தொடர்பாக தவறான செய்தியை டுவீட்செய்த சசிதரூர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சசிதரூர், ராஜ்தீப்சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது, ஐபிசி சட்டப்பிரிவு 153ஏ, 153பி, 295ஏ, 29, 504, 505(2). 124ஏ(தேச துரோகவழக்கு) 34, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 66வது பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவை ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகள் ஆகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...